தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 சிற்றுராட்சிகளிலும் தொழிலாளர் தினமான வருகின்ற 01-05-2017 திங்கட்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், 589 சிற்றூராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் தொடர்பாக ஊராட்சிகளில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன,
குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP). அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக் கூடம், தாய் திட்டம் 2016-17, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி. செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல். மகளிர் திட்டம், புதுவாழ்வுத்திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, பள்ளி சத்துணவு மையங்களின் வரவு செலவு கணக்குகள் ஆகிய பொருட்கள் குறித்து இக்கிராம சபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி பணியினை நிறைவேற்றுவது குறித்தும், கிராமத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்தும், தங்களது ஊராட்சி சொத்துகளை பேணி பாதுகாக்கவும், பொது நோக்கில் புதிய சாலைப் பணிகளை தேர்வு செய்திடவும், கிராமங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களை விரயம் செய்யாமல் பாதுகாத்து பயன்படுத்தவும், அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கி கிராம வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், 589 சிற்றூராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் தொடர்பாக ஊராட்சிகளில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன,
குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP). அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக் கூடம், தாய் திட்டம் 2016-17, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி. செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல். மகளிர் திட்டம், புதுவாழ்வுத்திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, பள்ளி சத்துணவு மையங்களின் வரவு செலவு கணக்குகள் ஆகிய பொருட்கள் குறித்து இக்கிராம சபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி பணியினை நிறைவேற்றுவது குறித்தும், கிராமத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்தும், தங்களது ஊராட்சி சொத்துகளை பேணி பாதுகாக்கவும், பொது நோக்கில் புதிய சாலைப் பணிகளை தேர்வு செய்திடவும், கிராமங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களை விரயம் செய்யாமல் பாதுகாத்து பயன்படுத்தவும், அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கி கிராம வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.