அதிரை நியூஸ்: ஏப்-22
துபை, ஷார்ஜா ஆகிய எமிரேட்டுகளின் எல்லையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வணிக வளாகம் 'ஸஹாரா சென்டர்'. நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென ஒரு பகுதி தீப்பற்றி எரியத் துவங்கியது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த 2 நிமிடத்தில் அங்கு வந்த ஷார்ஜா தீயணைப்புத் துறையினர் சுமார் 10 நிமிடத்திற்குள் தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்பு 20 நிமிடங்கள் வணிக வளாகத்தை தீயின் தாக்கத்திலிருந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓட்டுமொத்த தீயணைப்பு நடவடிக்கைகளும் சுமார் 30 நிமிடங்களில் முடிந்ததாக ஷார்ஜா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தீவிபத்தை தொடர்ந்து அனைவரும் உடனடியாக வணிக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்களும், காயங்களும் யாருக்கும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் ஸஹாரா சென்டர் விளம்பரப் பலகையில் (Sign Board) ஒன்றில் ஏற்பட்ட தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
துபை, ஷார்ஜா ஆகிய எமிரேட்டுகளின் எல்லையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வணிக வளாகம் 'ஸஹாரா சென்டர்'. நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென ஒரு பகுதி தீப்பற்றி எரியத் துவங்கியது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த 2 நிமிடத்தில் அங்கு வந்த ஷார்ஜா தீயணைப்புத் துறையினர் சுமார் 10 நிமிடத்திற்குள் தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்பு 20 நிமிடங்கள் வணிக வளாகத்தை தீயின் தாக்கத்திலிருந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓட்டுமொத்த தீயணைப்பு நடவடிக்கைகளும் சுமார் 30 நிமிடங்களில் முடிந்ததாக ஷார்ஜா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தீவிபத்தை தொடர்ந்து அனைவரும் உடனடியாக வணிக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்களும், காயங்களும் யாருக்கும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் ஸஹாரா சென்டர் விளம்பரப் பலகையில் (Sign Board) ஒன்றில் ஏற்பட்ட தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.