.

Pages

Sunday, April 30, 2017

துபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏலம்!

அதிரை நியூஸ்: ஏப்-30
துபையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக போலீஸாரால் முடக்கப்பட்ட கார்களை அதன் தண்டனை காலம் முடிந்தும் அதன் உரிமையாளர்களால் மீட்கப்படாதவை மொத்தம் 645 போலீஸார் வசம் உள்ளன. இந்தக் கார்களில் விலைமதிப்புமிக்க 13 ரேஞ்ச் ரோவர், 3 போர்சே, 1 அல்பா ரோமியோ உட்பட சில மெர்ஸிடஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ், மின் கூப்பர், ஜாகுவர் போன்றவைகளும் அடக்கம்.

முடக்கப்பட்டுள்ள 645 கார்கள் குறித்த விபரங்களை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிய நாளிதழ்களிலும் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் துபை போலீஸாரின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் உடனடியாக பர்துபை அல்லது தேராவிலுள்ள போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு சென்று தங்களுடைய கார்களை மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மீட்க முடியாமல் போனதற்கான தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

மேற்சொன்னவாறு செயல்படத் தவறுபவர்களின் கார்களை எதிர்வரும் மே 25 ஆம் தேதி பகிரங்க ஏலம் மூலம் விற்கப்பட உள்ளன. இந்த ஏலத்தை துபையில் செயல்படும் ஏல மையங்கள் மூலமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சகோதரர்கள் யாருடைய வாகனமாவது பட்டியலிடப்பட்டிருந்தால் உடனே அதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.