.

Pages

Monday, April 17, 2017

போரால் பாதிக்கப்பட்ட ஏமனியர்களுக்கு இந்தியாவில் சிகிச்சை !

அதிரை நியூஸ்: ஏப்-17
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி ஷியா தீவிரவாதிகளுக்கு எதிராகவும், ஏமன் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப் படைகள் போராடி வருகின்றன. இந்த போரின் நடுவே சிக்கி பல ஏமனியர்கள் உயிர் உடைமைகளுடன் உடல் உறுப்புக்களையும் இழந்து வருகின்றனர்.

இந்நிலையில், போரால் பாதிப்படைந்த சுமார் 54 பேர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக செல்வோருக்கான முழுச்செலவை ஏற்று இந்தியாவில் சிகிச்சையளிக்க அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அமீரக செம்பிறைச் சங்கம் செய்து வருகிறது.

அமீரகம் இதுவரை ஏமன் மக்களின் உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 2 பில்லியன் டாலர்கள் அளவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.