.

Pages

Thursday, April 27, 2017

சிங்கப்பூரில் அதிரை மாணவன் சாதனை !

மாணவன் முஹம்மது சுஹைல்
அதிரை நியூஸ்: ஏப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் கே.எஸ்.ஏ ஹாஜா சரீப். இவர் சிங்கப்பூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது சுஹைல் ( வயது 17 ). ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளியில் உயர்கல்வி பயிலும் மாணவன்.

இந்நிலையில், சொற்சிலம்பம்-2017  விருதிற்கான விவாதப் போட்டி சிங்கப்பூர் மீடியா கார்ப் அரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 'சிங்கப்பூர், உலகத் தரத்திற்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது' என்ற தலைப்பில் பேசிய ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி மாணவர்கள் சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு, உடை ஆகிய அடிப்படை வசதிகளைப் பட்டியலிட்டதுடன் வளங்கள் அற்ற சிங்கப்பூர் ஐம்பது ஆண்டுகளில் கண்ட பெரும் வளர்ச்சியை எடுத்துரைத்தனர்.

'வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை’ என்ற தலைப்பில், ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். விவாத முடிவில் ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி அணியின் ஹர்‌ஷிதா ஸ்ரீநிவாசன், அதிரை ஹாஜா ஷரீஃப் மகன் முகமது சுஹைல், ஷஃபானா அஃபிஃபா, சஹானா பாலசுப்ரமணியம், முகமது நவீத் ஜீவா ஆகியோரைக் கொண்ட அணியினர் வெற்றி பெற்று விருதினை தட்டிச்சென்றனர். பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்து தந்திருக்கும் மாணவன் முகமது சுஹைலை பெற்றோர்- உறவினர்கள், நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி உதவி: தமிழ்முரசு ( சிங்கப்பூர்)
தகவல்: அதிரை 'ஹனி' ஷேக்
 
 

3 comments:

  1. வாழ்த்துக்கள்
    அஜ்மீர் ஏஜென்ஸிஸ், அதிராம்பட்டினம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    அஜ்மீர் ஏஜென்ஸிஸ், அதிராம்பட்டினம்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் 14 வது வார்டு முன்னால் கவுன்சிலர் NKS மு.முகம்மது சரிப்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.