.

Pages

Sunday, June 11, 2017

துபாயில் அதிரை நோன்பு கஞ்சி / பிரியாணி விருந்துடன் புனிதமிகு ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிரை நியூஸ்: ஜூன் 11
அமீரக TIYA சார்பில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த வருடம் 5 ஆம் ஆண்டாக புனிதமிகு ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி துபாய் ஹம்ரியா லேடீஸ் பார்க்கில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மேலத்தெரு மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த மஹல்லாவாசிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் அதிரையின் பிரபல சமையல் மேஸ்திரி ஆயா முகைதீன் அவர்களால் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட அதிராம்பட்டினம் நோன்பு கஞ்சி மற்றும் பிரியாணி உணவு மற்றும் அன்சாரி அவர்களால் சுவையுடன் தயாரிக்கப்பட்ட ரோஸ் மில்க் பானம் ஆகியன நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் சமையல் செய்ய இடமளித்து உதவிய நெய்னா முகமது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த TIYA இஃப்தார் கமிட்டியினர் மற்றும் உறுப்பினர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மஹல்லாவாசிகள் மற்றும் அதிரையின் அனைத்து மஹல்லா பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோருக்கு TIYA சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் TIYA தலைவர் கே.எம்.என் முகமது மாலிக், முன்னாள் தலைவர் எஸ்.பி ஹாஜா, முன்னாள் செயலாளர் எஸ்.எம் சேக், முன்னாள் பொருளாளர் நவாஸ், துணைத் தலைவர் என்.எம்.எஸ் சேக்பரீது, செயலாளர் எஸ்.எம் சிராஜ், துணைசெயலாளர் பி. அபுல் பரகத், பொருளாளர் எஸ். மீரா முகைதீன், துணைப்பொருளாளர் எச், ரியாஸ் அகமது, இணைச்செயலாளர்கள் ஜவாஹிர் அகமது, கே. பசிர் அகமது, எம். ஹாஜி முகமது, எம். சலீம், ஜே. சபீக் அகமது மற்றும் ஏனைய நிர்வாகிகள் வருகை தந்த அனைவரையும் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.