அமீரக TIYA சார்பில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த வருடம் 5 ஆம் ஆண்டாக புனிதமிகு ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி துபாய் ஹம்ரியா லேடீஸ் பார்க்கில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மேலத்தெரு மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த மஹல்லாவாசிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் அதிரையின் பிரபல சமையல் மேஸ்திரி ஆயா முகைதீன் அவர்களால் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட அதிராம்பட்டினம் நோன்பு கஞ்சி மற்றும் பிரியாணி உணவு மற்றும் அன்சாரி அவர்களால் சுவையுடன் தயாரிக்கப்பட்ட ரோஸ் மில்க் பானம் ஆகியன நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் சமையல் செய்ய இடமளித்து உதவிய நெய்னா முகமது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த TIYA இஃப்தார் கமிட்டியினர் மற்றும் உறுப்பினர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மஹல்லாவாசிகள் மற்றும் அதிரையின் அனைத்து மஹல்லா பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோருக்கு TIYA சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில் TIYA தலைவர் கே.எம்.என் முகமது மாலிக், முன்னாள் தலைவர் எஸ்.பி ஹாஜா, முன்னாள் செயலாளர் எஸ்.எம் சேக், முன்னாள் பொருளாளர் நவாஸ், துணைத் தலைவர் என்.எம்.எஸ் சேக்பரீது, செயலாளர் எஸ்.எம் சிராஜ், துணைசெயலாளர் பி. அபுல் பரகத், பொருளாளர் எஸ். மீரா முகைதீன், துணைப்பொருளாளர் எச், ரியாஸ் அகமது, இணைச்செயலாளர்கள் ஜவாஹிர் அகமது, கே. பசிர் அகமது, எம். ஹாஜி முகமது, எம். சலீம், ஜே. சபீக் அகமது மற்றும் ஏனைய நிர்வாகிகள் வருகை தந்த அனைவரையும் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
UNITY UNITES... WAY OF ISLAM...GREAT SIMPLY..
ReplyDelete