.

Pages

Wednesday, May 30, 2018

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல் 652 பேர் ~ 90.29 % தேர்ச்சி (முழுவிவரம்)

அதிரை நியூஸ்: மே 30
தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 7-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து பிளஸ்-1 தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. அதன் படி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்ச்சி சதவீதம் தஞ்சையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 12 ஆயிரத்து 889 மாணர்களும், 16 ஆயிரத்து 241 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 130 மாணவர்கள் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 897 மாணவர்களும், 15 ஆயிரத்து 405 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 302 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் 85.54 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியும், 94.85 சதவீதம் மாணவிகள் தேர்ச்சியும் பதிவாகி உள்ளது. மொத்தம் தஞ்சை மாவட்டம் 90.29 சதவீதம் பெற்று மாநிலத்தில் 25-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் மதிப்பெண்கள் 500 க்கும் மேல் 652 பேர் பெற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.