புதிதாக தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெறவும், கடன் வசதிகளை பெறவும் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ள புதிய இணையதள சேவைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெற்று தருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் செயல்பட்டு வரும் ஒரு முனை தீர்வு குழு வாயிலாக விரைந்து பெற்று அளித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி. தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர தகவு (Single Window Portal) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத் துறையிடமிருந்து பெறவேண்டிய தடையில்லாச் சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றம் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தகவு (https:/easybusiness.tn.gov.in/msme) அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், தொழில் முனைவோர்கள் துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்திவரும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) ஆகிய இரு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் வாயிலாக, பதிவேற்றம் செய்து கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட (www.msmseonline.tn.gov.in/uyegp) மற்றும் (www.msmseonline.tn.gov.in/needs) தகவு அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.
தொழில் வணித்துறையின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக, சமூக ஊடக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தொழில் முனைவோர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து துறை அமல்படுத்தும் திட்டங்களை மாற்றியமைக்கவும் மேம்படுத்திடவும் இயலும்.
எனவே, பயனாளிகள் அனைவரும் மேற்கூறிய திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறவும் கூடுதல் விவரங்களை பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரில் அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெற்று தருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் செயல்பட்டு வரும் ஒரு முனை தீர்வு குழு வாயிலாக விரைந்து பெற்று அளித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி. தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர தகவு (Single Window Portal) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத் துறையிடமிருந்து பெறவேண்டிய தடையில்லாச் சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றம் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தகவு (https:/easybusiness.tn.gov.in/msme) அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், தொழில் முனைவோர்கள் துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்திவரும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) ஆகிய இரு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் வாயிலாக, பதிவேற்றம் செய்து கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட (www.msmseonline.tn.gov.in/uyegp) மற்றும் (www.msmseonline.tn.gov.in/needs) தகவு அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.
தொழில் வணித்துறையின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக, சமூக ஊடக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தொழில் முனைவோர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து துறை அமல்படுத்தும் திட்டங்களை மாற்றியமைக்கவும் மேம்படுத்திடவும் இயலும்.
எனவே, பயனாளிகள் அனைவரும் மேற்கூறிய திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறவும் கூடுதல் விவரங்களை பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரில் அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.