.

Pages

Monday, May 28, 2018

பட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியாமல் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை மே.28
பட்டுக்கோட்டையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தொடர்ந்து 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் 7 ஆவது ஊதியக்குழு சம்பந்தப்பட்ட கமலேஷ் சந்திர கமிட்டி அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி இந்தியா முழுவதும், கடந்த 22 ஆம் தேதி முதல் அஞ்சல் ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை மாலை அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மேலாடை இன்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். தேசிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர் ஜி.சீனிவாசன், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவஹர் பாபு, மதிமுக நகரச்செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் நகரச்செயலாளர் சக்ரவர்த்தி, தொலைத்தொடர்பு துறை சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சிவ.சிதம்பரம், அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சத்தியமூர்த்தி, அஞ்சல் ஊழியர் சங்க திருத்துறைப்பூண்டி கிளை செயலாளர் மனோகரன், தலைவர் நாகலிங்கம் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். நிறைவாக கிராம அஞ்சல் ஊழியர் முருகையன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேல்சட்டை அணியாமல் போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டதால் ஜனசந்தடி நிறைந்த தலைமை தபால் நிலையம் அருகே பரபரப்பான சூழல் நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.