தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆக்ரமிப்புகள் அகற்றுவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (22.05.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீராக வைத்திட காவல் துறையினரும்ää வருவாய்த் துறையினரும் இணைந்து இணக்கமாக பணியாற்றிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் கோவில் விழாக்கள் போன்ற சமுதாய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வட்டாட்சியர் தலைமையில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பொது மக்களுக்கு இடைய10று ஏற்படாத வண்ணம் அமைதியாக நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடையே சமூக நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி செயல்படும் மதுபான பார்களை காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;. உயர் நீதிமன்ற உத்தரவின்படி நீர் நிலைகளில் ஆக்ரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட முதன்மை அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீராக வைத்திட காவல் துறையினரும்ää வருவாய்த் துறையினரும் இணைந்து இணக்கமாக பணியாற்றிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் கோவில் விழாக்கள் போன்ற சமுதாய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வட்டாட்சியர் தலைமையில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பொது மக்களுக்கு இடைய10று ஏற்படாத வண்ணம் அமைதியாக நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடையே சமூக நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி செயல்படும் மதுபான பார்களை காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;. உயர் நீதிமன்ற உத்தரவின்படி நீர் நிலைகளில் ஆக்ரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட முதன்மை அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.