.

Pages

Wednesday, May 16, 2018

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% தேர்ச்சி (முழு விவரம்)

பட்டுக்கோட்டை, மே 16
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வை 3,966 மாணவர்கள் எழுதினர். இதில் 3,377 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 4,849 மாணவிகள் எழுதியதில் 4,740 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 8,815 பேர் எழுதினர். இதில் 8,117 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92 சதவீத தேர்ச்சி ஆகும். அதாவது மாணவர்களில் 85 சதவீத பேரும், மாணவிகளில் 98 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 8 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 1 சுயநிதிப் பிரிவுப் பள்ளி, 4 மெட்ரிக். பள்ளிகள் ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் மொத்தம் 6164 பேர் +2 தேர்வு எழுதினர். இதில், 5525 பேர் தேர்ச்சி பெற்று, 90 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.