.

Pages

Friday, May 25, 2018

மதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 25
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் (பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில்) அமைந்துள்ள மதரசத்துல் மஸ்னி பள்ளிவாசலில் கடந்த 5 ஆண்டுகளாக தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிவாசலில் இமாம் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி தொழுகை நடத்தி வருகிறார். இதில், பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் சுவையான நோன்பு கஞ்சி விநியோக்கிப்படுகிறது. மஹ்ரிப் (மாலை) 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர். இப்பணிகளை இப்பள்ளி நிர்வாகச் செயலாளர் எம். முகமது அஸ்லம் மற்றும் இமாம் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி  ஆகியோர் செய்து வருகின்றனர்.

குறிப்பு: நோன்பு கஞ்சி மற்றும் இஃப்தார் ஏற்பாட்டிற்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட அலைபேசியில் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினரை தொடர்பு கொண்டு உதவ நம்மிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
செயலாளர் எம். முகமது அஸ்லம் 9500565106
இமாம் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி 9788190945
 

2 comments:

  1. நோன்பு திறக்க வந்த நபர்களின் தலையில் தொப்பியை காணோம்

    ReplyDelete
  2. நோன்பு திறக்க வந்த நபர்களின் தலையில் தொப்பியை காணோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.