தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் (பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில்) அமைந்துள்ள மதரசத்துல் மஸ்னி பள்ளிவாசலில் கடந்த 5 ஆண்டுகளாக தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிவாசலில் இமாம் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி தொழுகை நடத்தி வருகிறார். இதில், பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் சுவையான நோன்பு கஞ்சி விநியோக்கிப்படுகிறது. மஹ்ரிப் (மாலை) 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர். இப்பணிகளை இப்பள்ளி நிர்வாகச் செயலாளர் எம். முகமது அஸ்லம் மற்றும் இமாம் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி ஆகியோர் செய்து வருகின்றனர்.
குறிப்பு: நோன்பு கஞ்சி மற்றும் இஃப்தார் ஏற்பாட்டிற்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட அலைபேசியில் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினரை தொடர்பு கொண்டு உதவ நம்மிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
நோன்பு திறக்க வந்த நபர்களின் தலையில் தொப்பியை காணோம்
ReplyDeleteநோன்பு திறக்க வந்த நபர்களின் தலையில் தொப்பியை காணோம்
ReplyDelete