.

Pages

Wednesday, May 16, 2018

அதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு!

அதிராம்பட்டினம், மே 16
இன்று (மே 16) தேசிய டெங்கு தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில், விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் சுகாதார ஆய்வாளர் கே.அன்பரசன், எஸ்.வெங்கடேஷ், அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு கண்காணிப்பாளர் முத்துகுமார் ஆக்யோர் முன்னிலையில், தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு டெங்கு தடுப்பு துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பபட்டன. மேலும், வீடுகளில் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி கொசு உற்பத்தியினை தடுத்திடவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.