.

Pages

Saturday, May 26, 2018

சவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 26
சவுதி, ஜித்தா மாநகரில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சார்பாக 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அப்துர்ரஹமான் தலைமை வகித்த உரை நிகழ்த்தினார். ரியாத் மண்டல இலக்கிய அணிச் செயலாளர் பேராசிரியர் அப்துல் ஹக், பித்ரா ஜகாத் குறித்து சிற்றுரையாற்றினார். மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி 'அள்ளி கொடுப்போம் ரமலானில்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மவ்லவி அப்பாஸ் அலி MISC, 'நவீன கொள்கை குழப்பம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் மண்டலத் தலைவர் அப்துல் மஜீத், மாநகர செயலாளர் ராஜா முஹம்மது, மாநகர துணைச் செயலாளர் இலியாஸ், ஆலோசகர் அதிரை அஜ்வா நெய்னா, கிளைப் பொறுப்பாளர்கள் ஜலால், பரக்கத் அலி, ரிள்வான், சமீர், கலிஃபத், முஷ்டாக், அப்துல் ஹலீம், ஜித்தா அய்டா அமைப்பின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் சம்சுதீன், தாஜுதீன், அகமது அஸ்லம், முனாஸ்கான் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன்  கலந்துகொண்டனர். மேலும், பெண்கள் உட்பட சவுதி வாழ் இஸ்லாமியத் தமிழர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மாநகர துணைச்செயலாளர் இலியாஸ் நன்றி கூறினார். பின்னர் (துவா) பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.