![]() |
File Image |
பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.அண்ணாதுரை தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் காசிநாதன், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்திக்கோட்டை, நாட்டுச்சாலை ஆகிய ஊர்களில் உள்ள கடைவீதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதவிர, 14 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்வதில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்காதது மற்றும் விதிமுறைகளை மீறியதாக 9 கடைகாரர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ. 1,100 வசூலிக்கப்பட்டது.
மேலும், 2-வது முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.