.

Pages

Wednesday, May 23, 2018

அரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை!

அதிரை நியூஸ்: மே 23
சவுதியில் இரு புனித ஹரம் ஷரீஃப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகத்தின் கீழ் செயல்படும் பொதுநல சேவைகளுக்கான பொது நிர்வாகத்தினர் உம்ரா வந்துள்ள யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு அடையாள அட்டையை அரபி மொழி பேசத் தெரியாதவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த அடையாள அட்டையில் யாத்ரீகர்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஆட்கள் காணாமல் போதல் அல்லது வழி மறந்து போதல் அல்லது அவசர உதவிகள் தேவையேற்படும் போது அங்குள்ள சமூகநல தன்னார்வத் தொண்டர்கள் இந்த அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் உரிய இடத்திற்கு சென்று சேர உதவுவார்கள்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.