பட்டுக்கோட்டை, மே 18
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் உள்ள பிரதான மின்சார போர்டில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து, உடனடியாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. பிரசவ வார்டில் இருந்த பெண்கள் பாதுகாப்பாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பிரசவ வார்டில் இருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டும், மணலை வீசியும் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினரும் சென்று தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த வார்டை தலைமை மருத்துவர் ராணி அசோகன், மருத்துவர் கி.நியூட்டன் ஆகியோர் பார்வையிட்டனர்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் உள்ள பிரதான மின்சார போர்டில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து, உடனடியாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. பிரசவ வார்டில் இருந்த பெண்கள் பாதுகாப்பாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பிரசவ வார்டில் இருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டும், மணலை வீசியும் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினரும் சென்று தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த வார்டை தலைமை மருத்துவர் ராணி அசோகன், மருத்துவர் கி.நியூட்டன் ஆகியோர் பார்வையிட்டனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.