அதிரை நியூஸ்: மே 31
முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவிற்கு சுயாட்சி அதிகாரம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக வாழும் தீவுப்பகுதி மிண்டானோ (Mindanao) .இந்தத் தீவின் அளவு தென் கொரியா நாட்டின் நிலப்பரப்பிற்கு ஈடானாதாகும். இந்தத் தீவு நிக்கல் (உலோகம்) சுரங்கங்கள் (Nickel Mines) உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்களும், பழப் பண்ணைகளும், பெருமளவிலான விவசாயத்திற்கு ஏற்ற உபரி நிலங்களும் நிறைந்த பகுதியாகும் என்றாலும் இங்கு நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் பிலிப்பைன்ஸிலேயே மிகவும் ஏழ்மையான பகுதியாகவும், தொழில் வளர்ச்சியற்ற பகுதியாகவும் இருந்து வந்தது.
இங்கு கடந்த சுமார் 50 ஆண்டுகளாக சுதந்திரம் கேட்டு நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் சுமார் 120,000 பேர்கள் கொல்லப்பட்டும், சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக செல்லும் நிலையும் ஏற்பட்டது. இந்த பிராந்தியத்தின் கவர்னராக சுமார் 22 ஆண்டுகள் இருந்தவர் தான் இன்றைய பிலிப்பைன்ஸ் அதிபர் டுயார்ட்டே.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த பல்வேறுகட்ட முயற்சிகளின் விளைவாக தற்போது மிண்டானோ பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்க அதிபர் டுயார்டேயின் முயற்சியின் விளைவாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் 227 உறுப்பினர்களின் ஆதரவுடன் சுயாட்சி வழங்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது, எதிர்ப்பு 11 பேர், அவைக்கு வராதவர்கள் 2 பேர் மட்டுமே. இனி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபரின் இறுதி ஓப்புதலுக்கு அனுப்பப்படும்.
எனினும் சுயாட்சி வழங்கப்படும் மிண்டானோ தீவு பிராந்தியத்தின் ராணுவம் (Defense), உள்நாட்டு பாதுகாப்பு (security), வெளியுறவு (Foreign Affairs) மற்றும் பண விவகாரங்கள் (Monetary Policy) அனைத்தும் வழமைபோல் பிலிப்பைன்ஸ் மத்திய அரசின் கையில் நீடிக்கும். இது தொடர்பாக மிண்டானோ போராளிகள் குழுவிற்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்கிற சட்டமே கீழ்சபையில் ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவிற்கு சுயாட்சி அதிகாரம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக வாழும் தீவுப்பகுதி மிண்டானோ (Mindanao) .இந்தத் தீவின் அளவு தென் கொரியா நாட்டின் நிலப்பரப்பிற்கு ஈடானாதாகும். இந்தத் தீவு நிக்கல் (உலோகம்) சுரங்கங்கள் (Nickel Mines) உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்களும், பழப் பண்ணைகளும், பெருமளவிலான விவசாயத்திற்கு ஏற்ற உபரி நிலங்களும் நிறைந்த பகுதியாகும் என்றாலும் இங்கு நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் பிலிப்பைன்ஸிலேயே மிகவும் ஏழ்மையான பகுதியாகவும், தொழில் வளர்ச்சியற்ற பகுதியாகவும் இருந்து வந்தது.
இங்கு கடந்த சுமார் 50 ஆண்டுகளாக சுதந்திரம் கேட்டு நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் சுமார் 120,000 பேர்கள் கொல்லப்பட்டும், சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக செல்லும் நிலையும் ஏற்பட்டது. இந்த பிராந்தியத்தின் கவர்னராக சுமார் 22 ஆண்டுகள் இருந்தவர் தான் இன்றைய பிலிப்பைன்ஸ் அதிபர் டுயார்ட்டே.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த பல்வேறுகட்ட முயற்சிகளின் விளைவாக தற்போது மிண்டானோ பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்க அதிபர் டுயார்டேயின் முயற்சியின் விளைவாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் 227 உறுப்பினர்களின் ஆதரவுடன் சுயாட்சி வழங்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது, எதிர்ப்பு 11 பேர், அவைக்கு வராதவர்கள் 2 பேர் மட்டுமே. இனி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபரின் இறுதி ஓப்புதலுக்கு அனுப்பப்படும்.
எனினும் சுயாட்சி வழங்கப்படும் மிண்டானோ தீவு பிராந்தியத்தின் ராணுவம் (Defense), உள்நாட்டு பாதுகாப்பு (security), வெளியுறவு (Foreign Affairs) மற்றும் பண விவகாரங்கள் (Monetary Policy) அனைத்தும் வழமைபோல் பிலிப்பைன்ஸ் மத்திய அரசின் கையில் நீடிக்கும். இது தொடர்பாக மிண்டானோ போராளிகள் குழுவிற்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்கிற சட்டமே கீழ்சபையில் ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.