அதிராம்பட்டினம், மே 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 'சஹர்' நேர விருந்து உபசரிப்பு ஆகியவை கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் சுவையான நோன்பு கஞ்சி விநியோக்கிப்படுகிறது. இதில், பொதுமக்கள், சிறார்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும், பள்ளிவாசலில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ், வித்துரு தொழுகைகள், திக்ரு, ஹிஸ்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. மேலும், தினமும் அதிகாலையில் நோன்பு நோற்பதற்காக 'சஹர்' நேர இலவச விருந்து உபசரிப்பு நடைபெற்று வருகிறது. இதில், அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் வெளியூர் இஸ்லாமியப் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பயனடைகின்றனர். இப்பணிகளை தக்வா பள்ளிவாசல் மஹல்லாத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் மற்றும் ஹாஜி எம்.என் அப்துல் ஜப்பார், ஏ.சாகுல் ஹமீது உள்ளிட்ட மஹல்லா நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 'சஹர்' நேர விருந்து உபசரிப்பு ஆகியவை கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் சுவையான நோன்பு கஞ்சி விநியோக்கிப்படுகிறது. இதில், பொதுமக்கள், சிறார்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும், பள்ளிவாசலில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ், வித்துரு தொழுகைகள், திக்ரு, ஹிஸ்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. மேலும், தினமும் அதிகாலையில் நோன்பு நோற்பதற்காக 'சஹர்' நேர இலவச விருந்து உபசரிப்பு நடைபெற்று வருகிறது. இதில், அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் வெளியூர் இஸ்லாமியப் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பயனடைகின்றனர். இப்பணிகளை தக்வா பள்ளிவாசல் மஹல்லாத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் மற்றும் ஹாஜி எம்.என் அப்துல் ஜப்பார், ஏ.சாகுல் ஹமீது உள்ளிட்ட மஹல்லா நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.