.

Pages

Tuesday, May 22, 2018

சர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

தஞ்சாவூர் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறை சார்பில் சர்வதே பல்லுயிர்ப்பரவல் தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (22.05.2018) கொண்டாடப்பட்டது.

பல்லுயிர்ப்பரவல் தினத்தினையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;
சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு மே 22 ஆம் தேதி சர்வதே பல்லுயிர்ப் பன்மை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  பூச்சியினங்கள், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள் எனப் பல்வேறு உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்து இசைவாக வாழ்ந்து வருகின்றன. இதனைப் பல்லுயிர்ப்பரவல் என்கிறோம்.

இந்த சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் பல்லுயிர்ப்பன்மை நாளாக மே 22 ஆம் தேதியை ஐ.நா.சபை அறிவித்து, தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு “பல்லுயிர்ப்பரவல் பாதுகாப்பின் செயல்பாட்டில் 25வது ஆண்டு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.  இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பல்லுயிர்ப்பரவல் தொடர்பான முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாக என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  தெரிவித்தார்.

பல்லுயிர்ப்பரவல் புகைப்படக் கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கண்டுக்களித்தனர். இக்கண்காட்சியில் மாவட்ட பல்லுயிர்பபரவல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பல்லுயிர்ப்பரவல் தொடர்பான முக்கியத்துவத்தை மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து 19.05.2018 தேதியன்று தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் பல்லுயிர்ப்பரவலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா போட்டி மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வன அலுவலர் சி.குருசாமி, வேளாண் துறை இணை இயக்குநர் மதியழகன், துணை இயக்குநர்கள் ஜஸ்டின், கணேசன், வனச்சரக அலுவலர் ஜி.ஜோதிகுமார், வனவியல் விரிவாக்க அலுவலர் ஆர்.விஜயகுமார், தன்னார்வ தொண்டு நிர்வாக இயக்குநர் பீ.வினோத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.