.

Pages

Tuesday, May 22, 2018

அதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள் அவதி!

அதிராம்பட்டினம் மே 22
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மதுக்கூர் வாடியக்காடு 33 கே.வி.ஏ துணை மின் நிலையத்தின் மின் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மின் பாதையில் ஏற்பட்ட திடீர் பழுதால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. புனிதமிகு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வரும் பெரும்பாலான இப்பகுதி இஸ்லாமியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இரவுநேர மின்தடையால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், வீடுகளில் பயன்படுத்திவரும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷன், குடிநீர் மின்மோட்டார், கிரைன்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் சரிவர இயங்குவதில்லை. இப்பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படாமலும், சீரான மின்சாரம் வழங்கவும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.