.

Pages

Sunday, May 27, 2018

மதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்னார்வலப் பெண்கள்!

அதிரை நியூஸ்: மே 27
மதினா மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலில் பெண்கள் பகுதியில் செயலாற்றிவரும் பெண் தன்னார்வத் தொண்டர்கள்.

ஆண்களைப் போலவே பெண் தன்னார்வத் தொண்டர்கள் பலரும் புனித மதினாவின் மஸ்ஜிதுன்னபவியில் புனித ரமலான் மாதத்தின் போது பெண் யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி வருகின்றனர். இவர்கள் அனைவரும் செம்பிறை சங்கத்தின் கீழ் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து உதவிகள் புரிகின்றனர்.

இந்த வருடம் மஸ்ஜிதுன்னபவியில் சுமார் 1,150 புனித ரமலானின் ஆரம்பம் முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு 6 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் என 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளாக செம்பிறைச் சங்கத்தின் சார்பாக தன்னார்வக் குழுக்களின் சூப்பர்வைஸராக பணியாற்றி வரும் சகோதரி ஜவ்ஹரா திலான் அவர்கள் கூறியதாவது, நாங்கள் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பெண்களை வயது வித்தியாசமின்றி எங்களுடன் இணைந்து பணியாற்ற வரவேற்கின்றோம். புனித ரமலான் மாதத்தில் பெண் தன்னார்வ தொண்டர்கள் எந்நேரமும் மஸ்ஜிதுன்னபவியில் உதவி தேவையுடையோருக்கு சேவை செய்திடும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்கின்றோம். தன்னார்வ தொண்டர்களுக்கு முறையான முதலுதவி பயற்சியும் வழங்கப்படுகிறது.

மேலும், பெண் தன்னார்வத் தொண்டர்கள் அவசரகால உதவிகள், மருத்துவ முதலுதவிகள், மருத்துவ சாதனங்களை கையாளுவதற்கான திறன்கள், எந்தந்த உயர் அதிகாரிகளை எந்தந்த தேவைகளுக்காக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை அவர்கள் பெறுகின்றனர். இந்த வருடம் வாக்கி டாக்கி மற்றும் தகவல் தொடர்புகளுக்கான புதிய தொழிற்நுட்ப கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் சேவைகளை உடனுக்குடன் செம்பிறைச் சங்கம் சார்பாக உடனுக்குடன் ஆவணப்படுத்தப்பட்டு புனித ரமலானுக்குப் பின் ஊக்கச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இவ்வருடம் இதுவரை பலருக்கும் ஸ்பாட் உதவிகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலர் அருகாமையிலுள்ள மருத்துவ மையங்களுக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தொழுது கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கும், குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த ஒரு பெண்ணிற்கும் உடனடி உதவிகள் செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.