மக்காவின் புனித ஹரம் ஷரீஃபில் பாதுகாப்பு பணிகளை கையாளும் சிறப்பு பாதுகாப்புப் படை
புனித மக்காவில் அமைந்துள்ள புனிதப் பள்ளியான ஹரம் ஷரீஃபின் பாதுகாப்பு பணிகளை திறம்பட கையாண்டு வருகின்றனர் புனிதப்பள்ளிக்கான சிறப்பு காவல் படையினர். கடந்த செவ்வாய்கிழமை அன்று பெய்த சிறுமழையின் போது வழிபாட்டாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நெரிசல் ஏதும் ஏற்படாத வகையிலும், தவாப் சுற்றுவோருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலும் அருமையாக கூட்டத்தை கையாண்டனர்.
புனித ஹரம் ஷரீஃப் பள்ளியின் உள்ளேயுள்ள கூட்டத்தின் அளவை கண்காணித்தல், பள்ளிக்குள் வருவோர் போவோருக்கு வசதி ஏற்படுத்தி தருதல், உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துதல், 5 வேளை கடமையான தொழுகை நேரங்கள் மற்றும் இரவு தொழுகையின் போது கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்றவையே இந்த சிறப்பு படையினரின் முக்கிய பணிகளாகும்.
தெற்கு, மேற்கு மற்றும் வடபுற நுழைவாயில்கள் வழியாக வழிபாட்டாளர்களை உள்ளே அனுமதித்தல் கிழக்கு புற வாயில் வழியாக வெளியேறவும் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்பள்ளி, கீழ்தளம், முதல்மாடி மற்றும் மேல்தளங்களுக்கு செல்வதற்கு சுமார் 150 நகரும் மின்சார படிக்கட்டுகளும் இணைப்பு பாலங்களும் உள்ளன.
கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பிக் பாக்கெட் மற்றும் திருடர்கள் கடந்த ஆண்டுகளை விட மிக அதிகமதிகம் குறைந்துள்ளனர். கேமிரா கண்காணிப்புகள் மூலம் யாரும் எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடவிடாமல் தடுக்கப்படுகின்றனர். கண்காணிப்பு அறை மிகவும் நவீன உபகரணங்களை கொண்டுள்ளதால் கூட்ட நெரிசல் தவிர்ப்பு மற்றும் அவசரகால உதவிகளுக்கு பெரும் பங்காற்றி வருகின்றன.
புனித கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கருப்புப் போர்வை மற்றும் புனிதப் பள்ளியின் நூலகத்தை கண்காணிக்கவும், தேவையான உதவிகளை செய்யவும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் 2,497 தொழிலாளர்கள் 24 மணிநேரமும் புனிதப்பள்ளியை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என புனிதப் பள்ளிகளுக்கான நிர்வாகத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
WHY THE FORCES WERE WEARING SHOES IN THE HARAM . HOW THEY WILL PERMIT . IT IS ANOYING !
ReplyDelete