.

Pages

Thursday, May 31, 2018

சவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 31
சவுதி, ஜித்தா மாநகரில் MEPCO கல்வி மேம்பாட்டு குழுமம் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாணவி ஹில்மியா கிராத் ஓதி தொடங்கி வைத்தார். லியாகத் அலி கான் வரவேற்றுப் பேசினார். நூருல் அமீன் குழுமத்தின் நோக்கம் மற்றும் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.

மன்னர் அப்துல் அஜிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜுபைர் 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு' என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். மவ்லவி மீரான் தாவூத் 'பித்ரா, ஜகாத் தொடர்பாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியினை மஹ்பூப் பாஷா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஜித்தா வாழ் சமூக ஆர்வல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், அதிராம்பட்டினம் அஜ்வா நெய்னா, அகமது அஸ்லம், தாஜுதீன். மீராஷா ராபியா மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  ஹாஜா முகைதீன் நன்றி கூறினார். பின்னர், துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டு, இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.