.

Pages

Saturday, May 19, 2018

எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியினர் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி ஆதம் நகர் பகுதியில், சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோடையையொட்டி, கடலோரப்பகுதியான இப்பகுதியில் நீர் மட்டம் அடியோடு குறைந்துவிட்டது. மேலும், இப்பகுதிக்கு குடிநீர் வழங்கி வரும் ஆழ்குழாய் போர்வெல் தூர்ந்து போய் காணப்படுவதால், குடிநீர் சீராக வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், புனிதமிகு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வரும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் இ.வாப்பு மரைக்காயர் மற்றும் நிர்வாகிகள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில்
சனிக்கிழமை சந்தித்து, இப்பகுதியில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு, புதிதாக ஆழ்குழாய் கிணறு, நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து அமைத்துதரக் கோரி மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சி.வி சேகர் எம்.எல்.ஏ, உரிய நடவடிக்கை தாம் மேற்கொள்வதாக அவர்களிடம் உறுதியளித்தாராம்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.