அதிரை நியூஸ்: மே 24
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர் இரத்த தானம்
தலசீமியா நோயால் (Thalassemia) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு 3 அல்லது 4 வாரத்திற்கு ஒருமுறை இரத்த மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது ராஜேஷ் குமார் என்கிற இந்து சிறுவனுக்காக தன் இரத்தத்தை கொடையாக வழங்கி காப்பாற்றியுள்ளார் 30 வயது முஸ்லீம் வாலிபர் ஒருவர்.
பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள சதர் மருத்துவமனைக்கு ராஜேஷ் என்கிற சிறுவன் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டான். உடனடியாக அவனுக்கு இரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது ஆனால் அந்த மருத்துவ மனையில் குறிப்பிட்ட இரத்த வகை இல்லாததுடன் ஏற்பாடு செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும் என டாக்டர் கைவிரித்துவிட்டார்.
அச்சிறுவனின் தந்தை உள்ளத்தால் இடிந்துபோய் இருந்ததை பார்த்த அம்மருத்துவமனையின் துப்புறவுத் தொழிலாளி ஒருவர் மாவட்ட இரத்ததான குழுவின் (District Blood Donor Team - DBDT) உறுப்பினரான அன்வர் ஹூசைன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அன்வர் தனது நண்பரும் இரத்ததான சேவகருமான ஜாவேத் ஆலம் என்பவருக்கு தகவல் தெரிவித்து 'தேவைப்படும் அரிய வகை இரத்தத்தை' கொடையாக வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
முதலில் தான் நோன்பு நோற்றிருப்பதாக தெரிவித்தார் மேலும் டாக்டர்களும் நோன்பு நோற்றவரிடமிருந்து இரத்ததானம் பெற மறுத்துவிட்டனர். எனினும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு நோன்பை முறித்துவிட்டு இரத்ததானம் தர சம்மதித்தார். அவருக்கு பழச்சாறும் திட உணவும் தரப்பட்டு இரத்தம் எடுக்கப்பட்டு சிறுவன் ரஜேஷூக்கு செலுத்தப்பட்டது.
இக்கட்டான நிலையில் தனது மார்க்க கடமையை ஒத்திவைத்துவிட்டு இரத்ததானம் வழங்கிய பின் 'எங்கள் இஸ்லாமிய மார்க்கம் மனிதாபிமான சேவைகளுக்கு முன்னுரிமை தருகின்றது' எனவே, என் மார்க்கக் கட்டளையின்படி நோன்பை முறித்து இரத்ததானம் செய்தேன் எனக்கூறினார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர் இரத்த தானம்
தலசீமியா நோயால் (Thalassemia) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு 3 அல்லது 4 வாரத்திற்கு ஒருமுறை இரத்த மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது ராஜேஷ் குமார் என்கிற இந்து சிறுவனுக்காக தன் இரத்தத்தை கொடையாக வழங்கி காப்பாற்றியுள்ளார் 30 வயது முஸ்லீம் வாலிபர் ஒருவர்.
பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள சதர் மருத்துவமனைக்கு ராஜேஷ் என்கிற சிறுவன் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டான். உடனடியாக அவனுக்கு இரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது ஆனால் அந்த மருத்துவ மனையில் குறிப்பிட்ட இரத்த வகை இல்லாததுடன் ஏற்பாடு செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும் என டாக்டர் கைவிரித்துவிட்டார்.
அச்சிறுவனின் தந்தை உள்ளத்தால் இடிந்துபோய் இருந்ததை பார்த்த அம்மருத்துவமனையின் துப்புறவுத் தொழிலாளி ஒருவர் மாவட்ட இரத்ததான குழுவின் (District Blood Donor Team - DBDT) உறுப்பினரான அன்வர் ஹூசைன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அன்வர் தனது நண்பரும் இரத்ததான சேவகருமான ஜாவேத் ஆலம் என்பவருக்கு தகவல் தெரிவித்து 'தேவைப்படும் அரிய வகை இரத்தத்தை' கொடையாக வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
முதலில் தான் நோன்பு நோற்றிருப்பதாக தெரிவித்தார் மேலும் டாக்டர்களும் நோன்பு நோற்றவரிடமிருந்து இரத்ததானம் பெற மறுத்துவிட்டனர். எனினும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு நோன்பை முறித்துவிட்டு இரத்ததானம் தர சம்மதித்தார். அவருக்கு பழச்சாறும் திட உணவும் தரப்பட்டு இரத்தம் எடுக்கப்பட்டு சிறுவன் ரஜேஷூக்கு செலுத்தப்பட்டது.
இக்கட்டான நிலையில் தனது மார்க்க கடமையை ஒத்திவைத்துவிட்டு இரத்ததானம் வழங்கிய பின் 'எங்கள் இஸ்லாமிய மார்க்கம் மனிதாபிமான சேவைகளுக்கு முன்னுரிமை தருகின்றது' எனவே, என் மார்க்கக் கட்டளையின்படி நோன்பை முறித்து இரத்ததானம் செய்தேன் எனக்கூறினார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.