.

Pages

Monday, May 21, 2018

அதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி !

அதிராம்பட்டினம், மே 21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). அதிராம்பட்டினத்தில் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (மே.20) ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை சாலையோரத்தில் அமைந்துள்ள மதுபானக்கடை அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் வாகனம் ஆறுமுகம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மதுபானக்கடை அருகே அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளால் பல உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்படுகிறது. மதுபானங்கள் வாங்க வரும் குடிகாரர்கள் இச்சாலையில் கும்பலாக சூழ்ந்துகொள்வதால், இரவு நேரத்தில் வாகன நெருக்கடியும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குவதும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே, அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ள மதுபானக்கடையை உடனே அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.