அதிரை நியூஸ்: மே 17
முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது.
இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக புனித ஹரம் ஷரீஃப் பள்ளிக்குள் கூட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மனிதாபிமான நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் டிரோன்கள் (Drones) எனப்படும் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
குட்டி விமானங்கள் மற்றும் பாதுகாப்பு விமானங்களுடன் (Security aircrafts) ஹரம் ஷரீஃபில் பொருத்தப்பட்டுள்ள 2500 கேமிராக்கள் (CCTV Cameras) மூலமும் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2,400 போலீஸ்காரர்களுடன் கூடுதலாக ஹரம் வளாகத்தை சுற்றி 1,300 பேர் காவல் ரோந்துப்பணிகளிலும் ஈடுபடுவர்.
முகத்தில் துன்பநிலையுடன் (அதீத நோய் அறிகுறிகள்) காணப்படும் உம்ரா யாத்ரீகர் அல்லது பார்வையாளர்கள் அவர்களின் பாதுகாப்பையும், உடல்நிலையையும் கருத்திற்கொண்டு ஹரம் ஷரீஃப் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் ஹரம் வளாகத்தில் லக்கேஜூடன் வருவதற்கும் அனுமதியில்லை.
புனித மக்காவின் காவல் துறையினர் உம்ரா யாத்ரீகர்களையும், பிற வணக்கசாலிகளையும் ஒழுங்குபடுத்தியும் ஹரம் ஷரீஃபுக்குள் அனுமதித்தல் மற்றும் வெளியேற்றும் பணிகளை நுழைவாயில்கள் மற்றும் கார் பார்க் பகுதிகளிலும் மேற்கொள்வர்.
ஹரம் ஷரீஃபை சுற்றி உம்ரா யாத்ரீகர்களின் வசதிக்காக 6 ஷட்டில் பஸ் நிலையங்கள் பாப் அலி, பான் அஜ்யாத், அல் காஸ்ஸா, சுஆப் அமீர், ஜரோல் மற்றும் ரெய்கா பக்ஷ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன உம்ரா பாதுகாப்பு படையின் துணை கமாண்டர் மேஜர் ஜெனரல் முஹம்மது அல் அஹ்மதி தெரிவித்தார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது.
இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக புனித ஹரம் ஷரீஃப் பள்ளிக்குள் கூட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மனிதாபிமான நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் டிரோன்கள் (Drones) எனப்படும் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
குட்டி விமானங்கள் மற்றும் பாதுகாப்பு விமானங்களுடன் (Security aircrafts) ஹரம் ஷரீஃபில் பொருத்தப்பட்டுள்ள 2500 கேமிராக்கள் (CCTV Cameras) மூலமும் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2,400 போலீஸ்காரர்களுடன் கூடுதலாக ஹரம் வளாகத்தை சுற்றி 1,300 பேர் காவல் ரோந்துப்பணிகளிலும் ஈடுபடுவர்.
முகத்தில் துன்பநிலையுடன் (அதீத நோய் அறிகுறிகள்) காணப்படும் உம்ரா யாத்ரீகர் அல்லது பார்வையாளர்கள் அவர்களின் பாதுகாப்பையும், உடல்நிலையையும் கருத்திற்கொண்டு ஹரம் ஷரீஃப் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் ஹரம் வளாகத்தில் லக்கேஜூடன் வருவதற்கும் அனுமதியில்லை.
புனித மக்காவின் காவல் துறையினர் உம்ரா யாத்ரீகர்களையும், பிற வணக்கசாலிகளையும் ஒழுங்குபடுத்தியும் ஹரம் ஷரீஃபுக்குள் அனுமதித்தல் மற்றும் வெளியேற்றும் பணிகளை நுழைவாயில்கள் மற்றும் கார் பார்க் பகுதிகளிலும் மேற்கொள்வர்.
ஹரம் ஷரீஃபை சுற்றி உம்ரா யாத்ரீகர்களின் வசதிக்காக 6 ஷட்டில் பஸ் நிலையங்கள் பாப் அலி, பான் அஜ்யாத், அல் காஸ்ஸா, சுஆப் அமீர், ஜரோல் மற்றும் ரெய்கா பக்ஷ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன உம்ரா பாதுகாப்பு படையின் துணை கமாண்டர் மேஜர் ஜெனரல் முஹம்மது அல் அஹ்மதி தெரிவித்தார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.