.

Pages

Saturday, May 26, 2018

ஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'மெகுனு' சூறாவளி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 26
ஓமனிலும் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'மெகுனு' சூறாவளி

ஏமன் நாட்டின் சொகோற்றா தீவு (Socotra Island) மற்றும் ஓமன் நாட்டின் 3 வது பெரிய நகரும் சுற்றுலாத்தளமுமான சலாலாஹ் (Salalah) பிரதேசத்தையும் 'மெகுனு' (Mekunu) எனப் பெயரிடப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த புயல் இன்று அதிகாலையில் தாக்கியது.

இந்த சூறாவளியில் சிக்கி ஓமனின் 12 வயது பெண் குழந்தை ஒன்று இறந்ததுடன் சொகோற்றா தீவிலிருந்து சுமார் 40 பேரை காணவில்லை என்றும் இவர்களில் பெரும்பாலோர் ஏமன், இந்தியா மற்றும் சூடான் நாட்டை சார்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமனில் கரையை கடந்த இந்த 'மெகுனு' சூறாவளியின் காரணமாக சலாலாவின் விமான நிலையம், கப்பல் துறைமுகம் மூடப்பட்டதுடன் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்களில் உள்ள கிரேன்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.பல நட்சத்திர விடுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தொழிலாளர்கள் பலர் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்

அரபிக்கடலில் உருவான இந்தப்புயலால் மும்பையில் அருகே நிறுத்தப்பட்டிருந்து மிதக்கும் உணவாகமாக செயல்பட்ட கப்பல் ஒன்றும் பாறைகளில் மோதி முழ்கியது. சலாலாவின் தெருக்களில் மழை வெள்ளத்தால் கார்கள் அடித்து செல்லப்பட்டு வருகின்றன.

முன்னதாக நேற்று வெள்ளியன்று அமீரக வானிலை மையம், அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்றாம் நிலையை (Level One) அடையும் என எச்சரித்திருந்ததுடன் இந்தப் புயலால் அமீரகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இருக்காது எனவும் அறிவித்திருந்தது.

இந்திய வானிலை மையம் மணிக்கு 170 முதல் 180 கி.மீ வேகத்தில் கடும் புயல் வீசும் எனவும், ஒரு கட்டத்தில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.