.

Pages

Tuesday, June 2, 2020

தஞ்சை மாவட்டத்தில் சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியம்!

அதிரை நியூஸ்: ஜூன் 02
அறுவடை செய்த விளைப்பொருட்களை புதிய தொழில்நுட்பத்துடன் உலர்த்தி சந்தைபடுத்துவதற்காக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக சூரிய கூடார உலர்த்தி (solar dryer) 60 சதவீத மானியத்தில் அமைத்து தரப்படுகிறது.

விவசாயிகள் சூரிய கூடார உலர்த்தி மூலம் விளைப்பொருட்களை உலர்த்தினால் விரைவில் உலர்ந்து விளைப் பொருட்களின் தரம் உயர்ந்து மதிப்பு கூடுகிறது. இக்கூடாரம் அமைப்பதால் காற்று, மழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

400 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரை சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் பட்சத்தில், சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் வரையிலும் இதர விவசாயிகளுக்கு ரூ.3.00 லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தஞ்சாவூர் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் க.குமணன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), தஞ்சாவூர் அவர்களை 9443489403 என்ற எண்ணிலும், கும்பகோணம் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் லெ.அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), கும்பகோணம் அவர்களை 63838 30644 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் சி.எழிலன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பட்டுக்கோட்டை அவர்களை 94436 78621 என்ற எண்ணிலும், மேலும் கூடுதல் விவரங்களுக்கு எச்.என் கான் செயற்பொறியாளர் (வே.பொ), தஞ்சாவூர் அவர்களை 94433 98633 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.