.

Pages

Tuesday, June 2, 2020

தஞ்சை மாவட்டத்தில் சோலார் பம்பு செட் அமைத்திட 70 சதவீத மானியம்!

அதிரை நியூஸ்: ஜூன் 02
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 70 சதவீத அரசு மானியம் வழங்கிட அரசு தீர்மானித்துள்ளது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் (PM-KUSUM)                வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்புசெட்டுகள் 468 எண்கள் அமைத்திட நடப்பு 2020-21-ம் நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு 5 குதிரை திறன் (HP), 7.5 குதிரை திறன் (HP) மற்றும் 10 குதிரை திறன் (HP) கொண்ட சோலார் பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும். மொத்த செலவு தொகையில் 70 சதவீதம் அரசு மானியமாகவும், மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகள் தங்களது பங்குத் தொகையாக செலுத்தப்பட வேண்டும்.

ஏற்கனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை.

தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும் பொழுது Nர்pய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்காத விவசாயிகள் புதியதாக பதிய வேண்டிய அவசியம் இல்லை. சூரிய சக்தியால் இயங்கும் மோட்டர் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் போது நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டர் பம்பு செட்டுகளை அமைத்திட தஞ்சாவூர் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் க.குமணன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அவர்களை 63834 26912 என்ற எண்ணிலும், கும்பகோணம் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் லெ.அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), கும்பகோணம் அவர்களை 94425 71176 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் சி.எழிலன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பட்டுக்கோட்டை அவர்களை 94436 78621 என்ற எண்ணிலும்,

மேலும் கூடுதல் விவரங்களுக்கு எச்.என் கான், செயற்பொறியாளர் (வே.பொ) அவர்களை 94433 98633 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.