தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 03-01-2014 மாலை 5 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக த.மு.மு.க / ம.ம.க அதிரை நகர மற்றும் கிளை நிர்வாகிகள் 2 வாகனங்களில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டுச்சென்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் கண்டன உரை நிகழ்த்தினார். தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்
ReplyDeleteஇது நம் முஸ்லிம்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை சேகர் {retair army )அவர்கள் மீது போட்ட வழக்கையும் திரும்பபெறவேண்டும் என்கிற ஒலியும் அங்கு ஒலிக்கப்பட்டது காவல் துறை உளவுத்துறை களுக்கு அதிர்சியுல்லாகியது அனைவரின் கவனமும் அங்கு ஈர்க்கப்பட்டது
ReplyDeleteபோராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்
ReplyDeleteபோராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்
ReplyDelete