.

Pages

Friday, January 3, 2014

பட்டுக்கோட்டையில் த.மு.மு.க நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 03-01-2014 மாலை 5 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக த.மு.மு.க / ம.ம.க அதிரை நகர மற்றும் கிளை நிர்வாகிகள் 2 வாகனங்களில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டுச்சென்றனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் கண்டன உரை நிகழ்த்தினார். தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.









4 comments:

  1. போராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இது நம் முஸ்லிம்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை சேகர் {retair army )அவர்கள் மீது போட்ட வழக்கையும் திரும்பபெறவேண்டும் என்கிற ஒலியும் அங்கு ஒலிக்கப்பட்டது காவல் துறை உளவுத்துறை களுக்கு அதிர்சியுல்லாகியது அனைவரின் கவனமும் அங்கு ஈர்க்கப்பட்டது

    ReplyDelete
  3. போராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  4. போராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.