.

Pages

Friday, March 21, 2014

அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் வைத்திலிங்கம் ததஜ, மஹல்லா, பஞ்சாயத்து நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார் !

இன்று காலை 11 மணியளவில் அதிமுக வேட்பாளர் திரு. கு.பரசுராமனுக்கு ஆதரவு அளிக்க வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு மாநில அமைச்சர் வைத்திலிங்கம் சென்று ஆதரவு திரட்டினார்.

அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சந்திப்பின் போது அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் 'மாமனிதர் நபிகள் நாயகம்' புத்தகத்தை வழங்கினார்கள். மேலும் ததஜ, மஹல்லா, பஞ்சாயத்து நிர்வாகிகள் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

அமைச்சர் வைத்திலிங்கத்தை அதிமுக கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் முக்கிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்...................என் சமுதாய அமைப்புக்கள் எங்கே செல்கிறன?

    ReplyDelete
  2. நம் மக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தப்போது கண்டு கொள்ளாத உத்தம புத்திரன், இப்போ நம் சமுதாய மக்களை பார்க்க ஓடோடி வருகிறார், புதியவருக்கு நாம் ஆதரவு கொடுத்து இவர்களுக்கு பாடம் புகட்டலாம், நடக்குமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.