.

Pages

Tuesday, March 25, 2014

அதிரை கடற்கரையில் களைகட்டும் சூதாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை கடற்கரை பகுதியில் தினந்தோறும் நடக்கும் சூதாட்டத்தில் ஏராளமான அப்பாவிகள் பணத்தை இழந்து வருகின்றனர். இதற்காக கடற்கரையோரத்தில் டென்ட் அமைக்கப்பட்டு அதில் அமர்ந்து சூதாட்டமாடுகின்றனர். தினமும் காலையில் ஆரம்பமாகும் சூதாட்டம் இரவு 7 மணி வரை நீடிக்கிறது. இருட்டிய நேரத்தில் விளையாட மின்விளக்கு வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வாழும் மீனவர்கள் பங்கேற்பதாக தெரிகிறது.

இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால், நீண்ட நேரம் விளையாடுவதற்கு இவர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது. மது பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து காணப்படுவதால் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மது அருந்துவதும் தெளிவாகிறது. சூதாட்ட அட்டைகளும் ஆங்காங்கே சிதறி காணப்படுகின்றன.

இதுகுறித்து அப்பகுதியில் புழங்கும் சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கவலையுடன் தெரிவிக்கையில்...
'சூதாட்டத்தை நடத்துபவர் சூதாட்ட பிரியர்களுக்கு மொபைல் போனில் தொடர்புகொண்டு முன்னதாகவே தகவல் தெரிவித்து விடுவதால் குறிப்பிட்ட நேரத்தில் சூதாட்டக்காரர்கள் கூடிவிடுகின்றனர். நாள் முழுக்க வியர்வை சிந்தி உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தை இது போன்ற கேடு கெட்ட செயல்களில் ஈடுபட்டு பணத்தை இழப்பது நம்மை வருத்தமடைய செய்கிறது.

அதிக பணத்திற்கு ஆசைபட்டு ரூபாய் 500 முதல் 1000 வரை கட்டி சூதாட்டத்தில் ஈடுபடும் அப்பாவிகள், இறுதியில் அடிமையாகி பணத்தை இழந்து விடுவதுதான் மிச்சம். இதனால் இவர்களின் குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் மோசமான நிலையை தழுவுகின்றனர். இதில் ஈடுபடும் அப்பாவிகளையும், அவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்து சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.





8 comments:

  1. இதில் கலந்து கொள்பவர்கள் மீனவர்கள் அல்ல, வேலை இல்லா வெட்டி பய என்று சொல்வார்களே அவர்கள் தான். மீனவர்கள் கடலுக்கு இரவில் போனால் எல்லா வேலை முடித்து வர மாலை நேரமாகி விடும், ஆனால் சிலர் சரக்கு அடிப்பது உண்மை. காவல் துரை சிலரும் இதில் கலந்து கொண்டதும் உண்டு. எப்படி ஒழிக்க முடியும்? அவர்களே திரிந்தினால் நால் தான் உண்டு.

    ReplyDelete
  2. சூது விளையாடும் நபர்களை சூது(போலீஸ்)கவ்வும்மா ?


    இந்த செய்தியை சேகரித்த செய்தியாள‌ர்க்கு எனது பாராட்டுக்கள்.மேலும் அவரிடம் ஒன்று கேட்க ஆசைபடுகிறேன்.

    இந்த சூது விளையாடும் இடங்களை தமிழக அரசே இலிய்ட் சூது கேம்ஸ்னு கொண்டு வந்தால் தமிழக அரசுக்கு இலபமாகவும் தமிழக மக்களுக்கு கஷப்பாகவும் இருக்கும்.இதற்காக சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சிகள் எல்லாம் பெருக்காக அன்று மற்றும் போராட்டம்,ஆர்பாட்டம் நடைபெறும் அடுத்து எல்லாம் காற்றோடு காற்றாக போய்விடும்.

    ஆம்,டாஸ்மாக் கடைகளை அதிரையின் பேருந்து நிலைய பகுதியிலும்,ஊர் எல்லைகளிலும் திறந்து வைத்துள்ளது இந்த அதிமுக அரசு,தமிழக அரசுக்கு இதனால் இலாபம் வ்ருகிறது என்று கூறும் அரசு தமிழக குடும்பங்களை பற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.,தொழிலர்களை,மாணவர்களை,இளைஞர்கள் முதல் முதியவர்கள் (பெண்கள் உள்பட) வரை மதுபானத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    தேர்தலுக்காக நமது சமுதாய அமைப்புகளும்,மதுபான கடைக்களுக்கு எதிராக கோஷம் இட்டவரகள் எல்லாம் இப்ப டாஸ்மாக கடைகளை திறந்து வைத்தவர்களுக்கு ஆதரவு, குர் ஆன் ஒதின வாய்கள் எல்லாம் மதுபான கடை திறந்தவர்களுக்கு ஆதரவு.அரசியலுக்காக அதிரை மக்களும் ஏனைய மக்களும் பகடை காய் உருட்டுவது போல் மாநில,மத்திய தேர்தலுக்கு உருட்டப்படுகிறார்கள் என்பதே உண்மை..

    தேர்தல் என்றவுடன் அனைவரும் அவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவு எதற்கு இந்த ஆதரவு ? ஏன் இந்த‌ உள்விஷம் வெளிவேஷம் !!!

    மீத்தேன் எடுக்க வர்ரான் உள்ளேவிடாதே!!! கூடன்குளத்தில் அணுமின் நிலையம் கட்டுறான் உள்ளேவிடாதே,அவன் வேற சாதி,மத காரன் உள்ளேவிடாதே !!! ஆனால் எங்கள் ஊரில் மதுபான கடைவருது உள்ளே விட அனுமதி கேட்டால் தமிழக அரசாம்!!!


    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    சூதும் மாதும் வேதனை செய்யும் என்று படித்துருக்கோம், ஆனால் சூதும் மதுவும் வேதனை செய்யும் என்று படித்துருக்கவில்லை.

    நல்லதொரு முயற்சி,.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

  4. இன்று உலகில் எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வட்டி, வரதட்சனைகொடுமை, மது, மாது, சூது, ஏமாற்று, வஞ்சகம், மோசடி, பாலியல்வன்கொடுமை, சாதிவெறி, மதவெறி போன்ற சமூகக்கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன இதற்கு யார்காரணம் அரசியலா? அரசாங்கமா? ஆன்மீகமா? விஞ்ஞானவளர்ச்சி மிகுந்த இந்த 21ம்நூற்றாண்டிலும் அமைதிக்கும் சமத்துவத்துக்கும் சகோதரதத்துவத்துக்கும் பெண் விடுதலைக்கும் இன்றைய மனித சமூகம் ஏங்கித் தவிக்கின்றது ஒரு கூட்டம் அரசியலை நோக்கி போகின்றது, ஒரு கூட்டம் அரசை நோக்கி போகின்றது ஒரு கூட்டம் ஆன்மீகத்தை நோக்கி போகின்றது. கிடைக்கும் பதில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!.
    மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

    ReplyDelete
  5. மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

      Delete
    2. மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

      Delete
  6. உள்ளுரில் இருக்கும் வேலை வெட்டி இல்லாதவன் எவன் வெளி நாட்டிலிருந்து வருவான் அவனிடம் இருக்கும் பணத்தை எப்படி செலவு வைக்கலாம் என்று யோசித்து கொண்டு வெளி நாட்டில் இருக்கு நண்பனுக்கு மிஸ்கால் கொடுப்பான். வெளி நாட்டில் இருக்கும் நண்பன் உடனே தொடர்பு கொள்வான் அவனும், இவனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மச்சான் எப்ப ஊருக்கு வருவாய் வரும் போது பணத்தோடு வா மச்சான். நமதூர் முன்னேறிவிட்டது சாராய கடை நமதூரில் நான்கு இருக்கு. சூது விளையாட இடம் இருக்கு, மச்சான் உனக்கு பொம்புள வேணுமா அதுக்கும் ஏற்பாடு பண்றேன். வண்டி என்னிடம் இருக்கு பெட்ரோலுக்கு நீ காசு கொடுத்துடு. அப்புறம் என்ன மச்சான் நமக்கு கொண்டாட்டம் தான் மச்சான். உன்னை ரொம்ப எதிர் பார்கிறேன் வந்திடு மச்சான். இரண்டு மாசம் லீவுக்கு ஊருக்கு வா ஜாலிய இரு மச்சான் என்று சொல்லிவிட்டு தொலை பேசியே வைத்துவிடுவான். இவனும் ஊருக்கு வருவான் கொண்டு வந்த பணத்தை தாறு மாற செலவு செய்து விட்டு ஊரிலே இருக்கிறவனிடம் மச்சான் பணம் கொடு நான் வெளி நாடு சென்று அனுப்புகிறேன் என்று கூறுகிறான். இப்படி தான் இருக்கிறது நமது சமுதாயம். எனக்கு தெரிந்த ஒருவனிடம் டே நமதூர் நகராட்சியாக மாறினால் தொழில் வளர்ச்சி அடையும், நமதூரில் பலருக்கு வேலை கிடைக்கும், நமதூர் முன்னேறும் என்றேன் உடனே அவன் சொன்னான் டே நீ வேற நமதூர் நகராட்சியாக மாறினால் வரிகள் அதிகமாக கட்டவேண்டும் நம்மளால் முடியாது என்று கூறி விட்டு சாராய கடை உள்ளே போறான். மது, மாது, சூது, இவைகளுக்கு செலவு செய்ய நமது சமுதாயம் முன்வருகிறது. நமது ஊரின் முன்னேற்றதிற்கும், நமது சமுதாய முன்னேற்றதிற்கும் உழைக்க, பாடுபட நமது சமுதாயம் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.