.

Pages

Saturday, March 29, 2014

அதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து இரு வேறு இடங்களில் மமகவினர் நடத்திய தெருமுனை பிரசாரங்கள் !

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று இரவு 7 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தின் அருகே தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவை ஆதரித்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 8 மணியளவில் தக்வா பள்ளியின் அருகே மீண்டும் பிரசாரம் தொடங்கியது. இரு வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் மற்றும் மமகவின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான மமக மற்றும் திமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.






2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சமுதாய இயக்கம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை கூறு போடுகின்ற பாவிகள் நீங்கள். ஒருமுறை கருணாநிதிக்கும் மறுமுறை ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக பேசி குர் ஆன் ஹதீஸை இந்த சாக்கடைக்கு உதாரணம் காட்டி பேசி வருகின்ற இயக்கவாதிகளே! நாளைய மறுமையில் பதில் சொல்லி ஆக வேண்டும் . வாய்கிழிய நம் சமுதாயத்தையே மாறி மாறி திட்டிக்கொள்கின்ற குறவர்கள் கூட்டம் நிங்கள். பொதுமக்களே இவர்கள் பின் செல்லாதீர்கள்! சென்ற தேர்தலில் கருணாநிதியை குறைக்கூறி இவர் கலிஃபா வா என்று கூறிவிட்டு கருணாநிதிக்கு ஒட்டு போடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று கூறிய த.மு.மு.க இன்று அவர்களுடன் சேர்ந்து ஒட்டு கேட்கிறீர்களே , சமுதாயத்தை அடகு வைக்க பார்க்கிறிர்களே ! ஒரு இயக்கம் சீட்டுக்காகவும் மற்றொரூ இயக்கம் பெட்டிக்காகவும் கூத்தாடிகள் பின்னாடி செல்லுகின்ற இயக்கவாதிகளே இது நியாயம் தானா ? சிந்திப்பீர் தங்களுடைய ஈமானை புதுப்பித்து கொள்வீர்களாக நீங்கள் சேரக்கூடிய இருக்கட்சிகளும் B J P க்கு ஆதரவு கொடுக்க கூடியவர்கள்தான். ஆகவே சிந்தித்து செயல்படுவீர்.

    இப்படிக்கு அதிரை முஸ்லீம் இளைஞர்கள் ! ! !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.