.

Pages

Monday, June 30, 2014

அமீரகம் துபையில் உள்ள குவைத் பள்ளியில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்பு ! [ புகைப்படங்கள் ]

குவைத் பள்ளி (MASJID KUWAIT LOOTAH MASQUE) என்றழைக்கப்படும் இப்பள்ளி வாசலை துபை மற்றும் ஏனைய அமீரகப்பிரதேசத்தில் உள்ள நமதூர்வாசிகள் மற்றும் நமது தமிழ் சகோதரர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.காரணம் பெரும்பாலான தமிழர்கள் தொழுகைக்காகவும், நோன்பு திறப்பதற்க்காகவும் இப்பள்ளிவாசலைத்தான் நாடி வருவார்கள்.

இப்பள்ளியின் தனிச்சிறப்பு என்னவெனில் நோன்பு மாதத்தில் நோன்பு திறக்க வழங்கப்படும் இஃப்தார் உணவு நமது ஊர் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல இங்கு நோன்புக்கஞ்சி, வடை சமூசா, ஆரஞ்சுப்பழம், பேரித்தம்பழம் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகிறது. நோன்பு திறக்க தேவையான போதுமான உணவு வழங்கப்படுவதால் ஏனைய மாதத்தை விட நோன்பு மாதங்களில் இங்கு கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இந்தப்பள்ளிக்கு வந்து நோன்பு திறந்து விட்டுச் செல்கின்றனர்.

இன்று 30/06/2014 திங்கட்கிழமை இரண்டாம் நாள் நோன்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு இப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அதன் புகைப்படங்கள் இதோ.... 









அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற முதல்நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று நடைபெற்ற முதல்நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தினமும் இரவு தொழுகைக்கு பிறகு 9.45 மணி முதல் 10.30 மணி வரை தமிழக தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி நிகழ்த்தும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.






செக்கடி பள்ளியில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சியை ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் பொதுமக்கள் !

நமதூர் செக்கடி பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகித்து வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள புதுமனைத்தெரு, நடுத்தெரு, நெசவுதெருவின் ஒரு பகுதியினர் உட்பட சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச்செல்கின்றனர்.

இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இரவில் தராவிஹ் தொழுகையும் நடைபெற்று வருகிறது.




நடுத்தெரு வாடிக்கையாளர் சேவை மையத்தில் அரசின் கல்வி உதவி தொகை பெற வங்கி கணக்கு எண் வசதி இலவசமாக ஏற்பாடு !

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின ( இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள் ) மாணவ – மாணவிகளுக்கு 2014-2015 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2014-15ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் பெறப்படுவதை அடுத்து கல்வி உதவித்தொகை பெறுவதற்காக பொதுமக்கள் மும்முரமாக தேவையான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

அரசு வங்கியின் மூலமே கல்வி உதவி தொகையை பயனாளிகளுக்கு வழங்கி வருவதால், ஒவ்வொரு பயனாளிகளும் வங்கி கணக்கு எண் பெறுவது அவசியமாக இருந்து வருகிறது.

இதற்காக வங்கிகளுக்கு சென்று புதிதாக வங்கி கணக்கை துவக்கி வருகின்றனர். இந்த பணிகளுக்காக நமதூர் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் எதிரே அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் நமதூரை சேர்ந்த சேக் அப்துல்லா அவர்கள் பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக புதிதாக வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கல்வி உதவி தொகை பெற நினைக்கும் பெற்றோர்கள் தேவையான ஆவணங்களுடன் இவரை அணுகி பயனடையலாம்.

மேலும் விதவை - முதியோர் - மாற்றுத்திறனாளி - உலமா  ஆகியோர் அரசிடமிருந்து பெரும் உதவித்தொகைக்கு தேவைப்படும் வங்கி கணக்கை இலவசமாக ஏற்படுத்தி கொடுக்கிறார்.


அதிரையில் மூன்று இடங்களில் நடைபெற இருக்கும் மவ்லவி யூஸுஃப் அவர்களின் பயான் நிகழ்ச்சி !

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரையில் வழக்கம்போல் இந்த ரமழானிலும் மவ்லவி யூஸுஃப் அவர்களின் பயான் இன்ஷா அல்லாஹ் கீழ்காணும் நேரங்களில் / இடங்களில் நடைபெறும்:

ஆண்களுக்கு :
செக்கடிப்பள்ளியில் தினமும் லுஹருக்கு பின்.

பெண்களுக்கு :
காலை 11-12 ALM School தாளாலர் அப்துற்றஜாக் அவர்களின் வீட்டிலும், இரவில் தராவீஹ்க்குப்பின் ஆலடித்தெரு செ.மு. வீட்டிலும் நடைபெறும்.

அனைவரும் கலந்துகொண்டு பயனடையும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறது. இதை பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது.

தகவல் : மு.செ.மு. சபீர் ( திருப்பூர் )

அதிரை கடலில் கரை ஒதுங்கும் கரும்பு பாசிகள் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை கடல் பகுதியில் அதிவேகமான தென்மேற்கு பருவ காற்று வீசுவதால் கடற்கரையோரத்தில் கரும்பு பாசிகள் ஒதுங்குகின்றன. கடலில்  வாழும் பலவித தாவரங்களில் கரும்பு பாசியும் ஒன்று . பலமாக வீசும் காற்றால் தானாக பிடுங்கி கொண்டு கடலில் மிதந்து கரையோரத்தில் வந்துவிடும்.   சிலநேரங்களில் மீனவர்கள் வலையில் மீன்களோடு இவ்வகை பாசிகளும் சிக்கிவிடும். பெரும்பாலும் தென்னை மரங்களுக்கு உரமாக இவற்றை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 



சவுதி ரியாத்தில் அதிரையர் நடத்திய முதல் நாள் இஃப்தார் நிகழ்ச்சி ![ படங்கள் இணைப்பு ]

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்  ஹாராவில் வசிக்கும் அதிரை நண்பர்கள் கலந்து கொண்ட முதல் நாள் இ ஃ ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தகவல் : அப்துல் மாலிக் ( ரியாத் )







Sunday, June 29, 2014

அதிரையில் பிறை பார்த்ததை தொடர்ந்து முதல் நாள் நோன்பை கடைபிடிக்க அறிவுறுத்தல் !

அதிரையில் இன்று பின்னேரம் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து இன்று இரவு முதல் நாள் நோன்பை கடைபிடிக்க அதிரையில் உள்ள மஸ்ஜித்களில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ள தராவீஹ் தொழுகையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகளிலும் பங்குபெற ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடப்பட்டு வருகிறது.

அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும், வீடுகளும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்டவற்றில் இங்குள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.

நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணபபடுகின்றன. அதிரை மக்கள்  பிறையை பார்த்த மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.



ஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ![ படங்கள் இணைப்பு ]

ஜப்பான் நாட்டில் வசித்து வரும் அதிரையர்கள் ஏற்பாட்டின் பேரில் மஸ்ஜீத் நூர் ஆஷிகாஹாவில் இன்று நடைபெற்ற முதல் நாள் இ ஃ ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிரையர் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், ஸ்ரீலங்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200 பேர்கள் கலந்துகொண்டார்கள்.