.

Pages

Friday, June 27, 2014

மல்லிபட்டினம் கலவரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செய்யது அப்துல் காதர் அதிரை செய்தியாளர்களிடம் வழங்கிய பேட்டி [ காணொளி ]

மல்லிப்பட்டினத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரசாரத்தின் போது இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தது.

மோதலில் ஏற்பட்ட விளைவாக ஏராளமான பொருட்கள் சேதங்கள், அருவாள் வெட்டுகள், இதைதொடர்ந்து காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள், அப்பகுதியில் போலீசார் குவிப்பு, பல்வேறு அரசியல் கட்சிகளின் நேரடி ஆய்வுகள், நீதி விசாரணை நடத்தகோரி ஐகோர்டில் வழக்கு, கட்சி அலுவலகம் சோதனை இப்படி பரபரப்பாக மல்லிபட்டினம் பகுதி இருந்து வருகிறது.  

இந்நிலையில் மல்லிபட்டினம் கலவரம் மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் கைதானோருக்காக சட்ட உதவிகளை செய்துவரும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செய்யது அப்துல் காதர் நேற்று பட்டுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்குகிற்காக ஆஜாராகியிருந்தார்.

மல்லிபட்டினம் கலவரம் தொடர்பாக தான் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கை குறித்து விளக்குவதற்காக நேற்று இரவு எஸ்டிபிஐ கட்சி அதிரை அலுவலகத்தில் பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிரையின் பிராதான செய்திகளை வழங்கி வரும் அனைத்து ஊடகங்களும் கலந்துகொண்டன.

பிரஸ் மீட்டின் போது எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.