.

Pages

Thursday, June 19, 2014

திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீமுக்கு சொந்தமான தோப்பில் மர்ம நபர்கள் தீ வைப்பு !

அதிரை மேலதெருவை சேர்ந்தவர் அப்துல் ஹலீம். இவர் திமுகவின் ஒன்றிய பிரதிநிதியாக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னை தோப்பு செடியன் குளத்தின் எதிரே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் தென்னை தோப்பை சுற்றி அமைக்கபட்டிருந்த வேலியை தீயிட்டு கொளுத்தபட்டுள்ளது. இதனால் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகியது. வேலியை சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் கருகி காணப்படுகிறது. இதுகுறித்து அப்துல் ஹலீம் அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.