தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ,ரொக்கப்பரிசு ரூபாய் 75,000/- பெற்றது .
தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழக பள்ளிக்கல்வி துறை ,பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது. சிறப்பு பரிசளிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து ரொக்க பரிசாக ரூபாய் 75,000/-ஐ இந்த ஆண்டு முதல் வழங்குகிறது .முதல் ஆண்டிலேயே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தேர்ச்சி விழுக்காடு ,சிறந்த பள்ளி மேலாண்மை ,அதிக மாணவர் சேர்க்கை ,பள்ளி சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு ,மாணவர்கள் ஒழுக்கம், ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவால் சிறந்த பள்ளிகள் எவை என தேர்வு செய்யப்படுகிறது .
செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்ற எளிய விழாவில் முதன்மை கல்வி அலுவலர் வே.தமிழரசுவிடமிருந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி ரொக்க பரிசினையும் ,பாராட்டு பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட கொன்றைக்காடு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதியையும் ,பள்ளி ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வே.தமிழரசு ,மாவட்ட கல்வி அலுவலர் சி.நரேந்திரன் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மு.கருணாநிதியிடம் கேட்டபோது ," சக ஆசிரியர்கள் ,கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்பாலும் நாங்கள் சாதிக்க முடிந்தது " என கூறினார்.
இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஒன்பது முறை நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது."தனியார் பள்ளிகளை விட மேம்பட்ட முறையில் மாணவர்கள் நலனிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த கவனம் செலுத்துவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ,இங்குவந்து மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் " என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி .
குறைவான கட்டிட வசதிகளுடன் இயங்கி வந்தாலும் இப்பள்ளி தனித்துவமான பள்ளியாக திகழ்கிறது என்றால் மிகையில்லை ...
படம் : தலைமை ஆசிரியர் மு.கருணாநிதியை பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி பாராட்டினார்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழக பள்ளிக்கல்வி துறை ,பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது. சிறப்பு பரிசளிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து ரொக்க பரிசாக ரூபாய் 75,000/-ஐ இந்த ஆண்டு முதல் வழங்குகிறது .முதல் ஆண்டிலேயே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தேர்ச்சி விழுக்காடு ,சிறந்த பள்ளி மேலாண்மை ,அதிக மாணவர் சேர்க்கை ,பள்ளி சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு ,மாணவர்கள் ஒழுக்கம், ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவால் சிறந்த பள்ளிகள் எவை என தேர்வு செய்யப்படுகிறது .
செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்ற எளிய விழாவில் முதன்மை கல்வி அலுவலர் வே.தமிழரசுவிடமிருந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி ரொக்க பரிசினையும் ,பாராட்டு பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட கொன்றைக்காடு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதியையும் ,பள்ளி ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வே.தமிழரசு ,மாவட்ட கல்வி அலுவலர் சி.நரேந்திரன் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மு.கருணாநிதியிடம் கேட்டபோது ," சக ஆசிரியர்கள் ,கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்பாலும் நாங்கள் சாதிக்க முடிந்தது " என கூறினார்.
இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஒன்பது முறை நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது."தனியார் பள்ளிகளை விட மேம்பட்ட முறையில் மாணவர்கள் நலனிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த கவனம் செலுத்துவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ,இங்குவந்து மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் " என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி .
குறைவான கட்டிட வசதிகளுடன் இயங்கி வந்தாலும் இப்பள்ளி தனித்துவமான பள்ளியாக திகழ்கிறது என்றால் மிகையில்லை ...
படம் : தலைமை ஆசிரியர் மு.கருணாநிதியை பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி பாராட்டினார்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.