.

Pages

Friday, June 20, 2014

அதிரை பீச் பாய்ஸ் & SSMG இணைந்து நடத்திய கால்பந்தாட்ட போட்டிகளில் அதிரை AFFA - பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி !

அதிரை பீச் பாய்ஸ் & SSMG ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று [ 20-06-2014 ] மாலை 5 மணியளவில் நமதூர் கடற்கரைதெரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது.  முதல் ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும், மதுக்கூர் அணியும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றனர். AFFA அணியின் நட்சத்திர வீரர்கள் லோட்டஸ் நெய்னா, அசரப் ஆகியோர் தலா 1 கோல் அடித்து தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தனர்.

இதை தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. இதில் பிச்சினிக்காடு அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்றனர்.

முன்னதாக இன்றைய முதல் ஆட்டத்தை கடற்கரை தெரு ஜமாஅத் நிர்வாகிகள், அதிரை பீச் பாய்ஸ் மற்றும்  SSMG நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்

இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் அஜீஸ் தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக செய்யது புகாரி சிறப்பாக கையாண்டார்.

இன்றைய முதல் நாள் ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.

நாளைய ஆட்டமாக அதிரை பீச் பாய்ஸ் அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.


4 comments:

  1. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  2. AFFA அணி அடுத்த போட்டியிலும் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி... காணொளி எடுத்து பதிவிட வாய்ப்பிருந்தால் பதிவிடுங்கள்.... ஐடிஐ க்ரவுண்ட் பந்துமேட்ச்சாம்... மறக்கவே முடியாத டயலாக்...:)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.