தஞ்சை மாவட்டம் அதிரை, சேதுபாவாசத்திரம் கடலோரப்பகுதியில் டிஐஜி சஞ்சய் குமார் மேற்பார்வையில் எஸ்பி தர்மராஜன் தலைமையில் பட்டுகோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன், அதிரை இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்த், சேதுபாவ சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேராவூரணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் 20 சப் இன்ஸ்பெக்டர்கள் 130 ஆயுதபடை காவலர்கள் உட்பட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கடலோர காவல்துறையினர் மற்றும் இந்திய கடற்படையினர் தனித்தனியாக படகுகளில் சென்று மீனவர்களிடம் அடையாள அட்டை மற்றும் படகு பதிவு புத்தகங்கள் உள்ளதா, சந்தேகத்திற்கிடமான வகையில் படகுகள் செல்கிறதா என சோதனையிட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஒத்திகை பணிகள் இன்று மாலை வரை நீடிக்கும்.
ஹம்லா இது என்ன வடமொழியா அல்லது தமிழ் மொழியா.
ReplyDelete