முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது ராஜபக்சே அரசு தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பேசுகையில்:
இலங்கையில் அப்பாவி தமிழர்களை தொடர்ந்து கொன்று குவித்து கொலை வெறி ஆட்டம் ஆடிய ராஜபக்சேயின் கொலை வெறி இன்னும் அடங்க வில்லை. தற்பொழுது இஸ்லாமியர்களை தனியாக பிரித்து அவர்களையும் கொன்று குவிக்கும் நோக்கத்தோடு ஆட்சி செய்யும் ராஜபக்சே பற்றி யாரும் கண்டு கொள்ளாதது ஏன்? தமிழகத்துக்கு சமீப காலத்தில் வந்த மோடி என்றைக்காவது இலங்கை தமிழர்களின் படுகொலை பற்றி பேசி இருப்பாரா? அன்று தமிழர்களையும் இன்று இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்கும் அதே ராஜபக்சேயை பற்றி எதும் பேசாமல்; மோடி மௌனம் சாதிப்பது ஏன்? குஜராத்தில் அன்று முஸ்லிம்களையும், இன்று இலங்கையில் முஸ்லிம்களையும் கொன்று குவித்த மோடிக்கும் ராஜபக்சேக்கும் என்னா தான் விதியாசம்? இதனை தமிழர்கள் உணர வேண்டும். தமிழன தலைவர் பிரபாகரன் தான் தமிழ் இனத்திற்கே தலைவர் ஆனால் இங்கே தமிழனுக்காக எதையும் செய்யாதவர்களை எல்லாம் தமிழனத் தலைவர் என்கிறார்கள். இது தான் வேடிக்கையாக உள்ளது. இஸ்லாமியர்கள் எதை செய்யதாலும் தீவிரவாதம் என்ற சொல்லும் நமது தேசம் என்றைக்கு இதனை மாற்றி கொள்ளும் என்ற தெரியவில்லை என்றார். ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வீரசேகர், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் வடுவூர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கரையங்காடு சதீஸ், செல்லப்பா, பால்ராஜ், முரளி உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்;.
படம் செய்தி:
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பேசினார். அருகில் ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள்.
'நிருபர்' முகைதீன் பிச்சை
இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பேசுகையில்:
இலங்கையில் அப்பாவி தமிழர்களை தொடர்ந்து கொன்று குவித்து கொலை வெறி ஆட்டம் ஆடிய ராஜபக்சேயின் கொலை வெறி இன்னும் அடங்க வில்லை. தற்பொழுது இஸ்லாமியர்களை தனியாக பிரித்து அவர்களையும் கொன்று குவிக்கும் நோக்கத்தோடு ஆட்சி செய்யும் ராஜபக்சே பற்றி யாரும் கண்டு கொள்ளாதது ஏன்? தமிழகத்துக்கு சமீப காலத்தில் வந்த மோடி என்றைக்காவது இலங்கை தமிழர்களின் படுகொலை பற்றி பேசி இருப்பாரா? அன்று தமிழர்களையும் இன்று இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்கும் அதே ராஜபக்சேயை பற்றி எதும் பேசாமல்; மோடி மௌனம் சாதிப்பது ஏன்? குஜராத்தில் அன்று முஸ்லிம்களையும், இன்று இலங்கையில் முஸ்லிம்களையும் கொன்று குவித்த மோடிக்கும் ராஜபக்சேக்கும் என்னா தான் விதியாசம்? இதனை தமிழர்கள் உணர வேண்டும். தமிழன தலைவர் பிரபாகரன் தான் தமிழ் இனத்திற்கே தலைவர் ஆனால் இங்கே தமிழனுக்காக எதையும் செய்யாதவர்களை எல்லாம் தமிழனத் தலைவர் என்கிறார்கள். இது தான் வேடிக்கையாக உள்ளது. இஸ்லாமியர்கள் எதை செய்யதாலும் தீவிரவாதம் என்ற சொல்லும் நமது தேசம் என்றைக்கு இதனை மாற்றி கொள்ளும் என்ற தெரியவில்லை என்றார். ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வீரசேகர், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் வடுவூர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கரையங்காடு சதீஸ், செல்லப்பா, பால்ராஜ், முரளி உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்;.
படம் செய்தி:
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பேசினார். அருகில் ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள்.
'நிருபர்' முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.