.

Pages

Saturday, June 14, 2014

முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன் விருப்ப ஓய்வு !

அதிரை இமாம் ஷாஃ பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 01-09-1998 அன்று முதல் மேலாளராக பணி புரிந்து வந்த நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன் அவர்கள் முதுமை காரணமாக தனது பொறுப்பிலிருந்து கடந்த 31-05-2014 அன்று முதல் விருப்ப ஓய்வு பெற்றார்.

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. //இவரால் எழுதப்பட்ட ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் ( வினாடி-வினா ) வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளது மேலும் ‘உமறுப் புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவைகளாகும்.//

    மதிற்பிற்குரிய எனது ஆசான் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T சார் அவர்கள் எழுதிய புகழ் பெற்ற நாடகங்களின் ஒன்று 'எங்கே இளவரசன் '
    இதில் அப்போது 1980 ல் நான் நாகன் என்ற வில்லனாக நடித்தவன்.

    ReplyDelete
  3. எனது வாழ்வுப் பயணத்தில் நான் சந்தித்த பல மனிதர்களுள் மிக உயர்ந்த நிலையில் வைத்து நான் போற்றும் மனிதர்களில் ஒருவர் எங்கள் ஹாஜாமீ சார். அவர்கள்

    கல்விப் பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் அவர்களது பரந்த அனுபவமும் ஆற்றலும் தொடர்ந்து இந்தப் பின் தங்கியுள்ள சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

    அதற்காக அவர்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தைத் தர வேண்டுமென்று து ஆச் செய்கிறேன்.

    ReplyDelete
  4. அவர்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தைத் தர வேண்டுமென்று து ஆச் செய்கிறேன்.

    ReplyDelete
  5. விருப்பு ஓய்வு பெறும் ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் சகல நலமும் பெற்று தமது வாழ்க்கையை மன அமைதியுடனும் நிம்மதியுடனும் சிறப்புடன் வாழ்நாளை கழிக்க வாழ்த்துக்களுடன் துவா செய்வோமாக.!

    நான் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஹாஜாமுகைதீன் சார் இயக்கிய ''திறக்கட்டும் சிறைக்கதவு'' எனும் நாடகமும் அதில் நடித்த ஜாபரும் இன்னும் என் நினைவை விட்டு நீங்காமல் நெஞ்சினில் குத்திய முத்திரையாய் பதிந்துள்ளது.

    ReplyDelete
  6. நல்ல ஆசிரியர், எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர், சாந்தமான குணம் கொண்டவர், அமைதியை கடைப்பிடிப்பவர், அன்பாக பேசக்கூடியவர், அன்று சைக்கிளை மெதுவாக ஓட்டியவர், எல்லா விதத்திலும் சிறப்போடு இருந்தவர்.

    இவ்வளவும் அம்சங்களையும் பெற்றிருக்கும் இந்த ஆசானை.
    நான் என்ன சொல்லி வாழ்த்துவது?
    எப்படி வாழ்த்துவது?

    சார் நல்லா இருக்கீங்களா? என்று சாதாரணமாக கேட்டால்கூட நா நல்லா இருக்கேன் நீ எப்படிப்பா என்று திருப்பி அவர்களின் கேட்க்கும்போது அதில் ஒரு தனித்தன்மை விளங்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.