.

Pages

Monday, June 23, 2014

அதிரையில் பேருந்து மீது மனநிலை பாதித்த வாலிபரின் திடீர் தாக்குதலால் பரபரப்பு !

இன்று இரவு காரைக்குடியிலிருந்து அதிரை வழியாக ஈசிஆர் சாலையில் தனியார் பேருந்து பட்டுகோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து ஈசிஆர் சாலையில் உள்ள கனரா வங்கி அருகே கடக்கும் போது அப்பகுதியில் சுற்றிதிரிந்த சற்று மனநிலை பாதிப்படைந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடிரென்று பேருந்தின் முகப்பில் உள்ள கண்ணாடி மீது கல்லை எறிந்துள்ளார். இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுதும் உடைந்து சேதமடைந்தது.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மனநிலை பாதித்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இளைஞர்கள் கூடியதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.





1 comment:

  1. ஊரின் பெயரை கெடுக்கும் இதுபோன்ற வெறிச்செயல்கள் நமது மக்களால் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
    இப்படிப்பட்டவர்கள் உண்மையில் மனநலம் பாதிக்கபட்டவர்தானா ? என தீர ஆராயப்படவேண்டும் காராணம் இவர்கள் இதுபோன்ற வேசத்தில் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை இல்லை என்பது இவர்களுக்கு பிளஸ் பாய்ன்ட் ஆக அமைந்துவிடும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.