.

Pages

Thursday, June 12, 2014

அதிரை காட்டுப்பள்ளியில் திறக்கப்படாமல் இருந்த சுகாதார வளாகம் பூட்டை உடைத்து அதிரடியாக திறப்பு !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி தெரு பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 9 லட்சம் ஒதுக்கீட்டில் ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் திறக்கப்படாமல் இருந்துவந்தது. அவ்வப்போது பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளையும் வைத்தவண்ணம் இருந்தனர் .

இந்நிலையில் அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் லத்தீப் அவர்களின் முயற்சியின் கீழ் இன்று மாலை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்த சுகாதார வளாகத்தை அதிரடியாக பூட்டை உடைத்து மின்இணைப்பு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  திறக்கப்பட்டது. சுகாதார வளாகத்தின் மின் விளக்குகள் அனைத்தும் பழுதுகள் சரிசெய்யப்பட்டு எரியவிடப்பட்டன. வாட்டர் டேங்கில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்துவந்த சுகதாரா வளாகம் இன்று திறக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





3 comments:

  1. இப்பவாது அந்த பூட்டை உடைதீர்ஹலே நல்லதொரு முயற்சி செய்தீர்கள் லத்தீப் நானா அவர்களே வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  2. அது காஸ்ட்லியான பூட்டா?

    ReplyDelete
  3. பொது மக்களுக்காக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம் தான்-

    மற்ற இடங்களிலும் கட்டப்பட்டு இதே நிலைமைதான் இப்படி இருக்கையில் இதன் பராமரிப்பு எப்படி இருக்கும்? பயன்பாட்டர்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இல்லையேல் பன்றிகளின் இருப்பிடமாகும் அதோடு சமூக விரோதசெயல்கள் நடக்கும் கூடாரமாக மாறிவிடும். ,

    பட்டுக்கோட்டை பஸ்ஸ்டாண்டில் நிற்கும்போது கப் அடிக்குமே அதே போல் இதையும் மாற்றிவிடாதிங்க மக்களே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.