.

Pages

Sunday, June 29, 2014

அதிரையில் பிறை பார்த்ததை தொடர்ந்து முதல் நாள் நோன்பை கடைபிடிக்க அறிவுறுத்தல் !

அதிரையில் இன்று பின்னேரம் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து இன்று இரவு முதல் நாள் நோன்பை கடைபிடிக்க அதிரையில் உள்ள மஸ்ஜித்களில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ள தராவீஹ் தொழுகையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகளிலும் பங்குபெற ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடப்பட்டு வருகிறது.

அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும், வீடுகளும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்டவற்றில் இங்குள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.

நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணபபடுகின்றன. அதிரை மக்கள்  பிறையை பார்த்த மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.



1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    ரமழான் முபாரக்.

    வருடா வருடம் தலைப்பிறை விஷயத்தில் சற்று குழப்பம் வருவது சகஜமாக இருக்கின்றனது, இது இன்று நேற்று அல்ல, நான் சிறியவனாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகின்றது, காரணம் இயற்கையின் விளையாட்டில் ஒன்றான மேகங்களின் கூட்டங்கள்.

    உலக புவியியல் விதிப்படி நமதூரில் நேற்றைய மறையும் நேரங்கள்.
    சூரியன் மாலை 6.37மணி
    சந்திரன் மாலை 7.35மணி.

    இன்று மறையும் நேரங்கள்.
    சூரியன் மாலை 6.37மணி.
    சந்திரன் மாலை 8.08மணி..

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.