.

Pages

Saturday, June 14, 2014

அதிரை பைத்துல்மால் வழங்கிய ஜனாஸா குளிப்பாட்ட பயன்படும் மேஜைகள் - கிரைண்டர் - தையல் இயந்திரங்கள் !

பைத்துல்மால் மாதாந்திரக்கூட்டத்தில் ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் மேஜைகளை அதிரை பள்ளிகளுக்கு வழங்குது என்ற தீர்மானத்தின்படி,

1. மரைக்கா பள்ளி
2. பெரிய ஜும்ஆ பள்ளி
3. பிலால் நகர் பள்ளி
4. கடற்கரைத் தெரு பள்ளி
5. A.J. பள்ளி

கடந்த 14-05-2014 அன்று அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாலை கீழ்க்கண்ட பள்ளிவாசல்களுக்கு ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் 2 மேஜைகள் வழங்கப்பட்டது.

6. சுரைக்கா கொல்லை கலீபா உமர் ( ரலி ) மஸ்ஜீத்
7. ஆசாத் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளி

ரியாத்வாழ் அதிரை சகோதரர்கள் வழங்கிய 1 மேஜை, சவூதி தமாமில் வசிக்கும் முகைதீன் அவர்கள் வழங்கிய 1 மேஜை, ஆகக்கூடுதல் 2 மேஜைகள் இன்று வழங்கப்பட்டது.  இதில் சுரைக்கா கொல்லை கலீபா உமர் ( ரலி ) மஸ்ஜீத் சார்பில் அப்துல் மாலிக் மரைக்காயர், ஆசாத் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளி சார்பில் அதிரை மைதீன், சேக்காதி. நெய்னாமலை ஆகியோர் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து பெற்றனர்.

இதைதொடர்ந்து ஹாஜா நகர், வண்டிபேட்டை, செட்டிதெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்கப்பட்டது. இதில் பைத்துல்மால் திருக்குர்ஆன் மாநாட்டில் பெயர் சொல்ல விரும்பாத அதிரை சகோதரர் வழங்கிய 1 தையல் இயந்திரம் மற்றும் பைத்துல்மால் சார்பில் மற்றுமொரு தையல் இயந்திரம் , கிரைண்டர் ஆகியன வழங்கப்பட்டது.

இதில் கணவனை இழந்த பயனாளி ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதாகவும், தான் பெற்றுவந்த மாதாந்திர பென்சன் தொகைக்கு பதிலாக தையல் இயந்திரத்தை தமக்கு வழங்க விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தையல் இயந்திரம் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Masha Allaah... All will be succeed with Allaah's Grace.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.