.

Pages

Friday, June 27, 2014

அதிரையில் வெள்ளிக்கிழமை திடீர் மின்தடைக்கு TNTJ ஜும்மாவில் கண்டனம் !

வெள்ளிக்கிழமை அன்று அதிரையில் இயங்கும் கல்லூரி, பள்ளிக்கூடங்களும், வர்த்தக நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கபட்டிருக்கும். பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் இன்றைய தினத்தில் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

இஸ்லாமியர்களுக்கு முக்கிய நாளாக கருதிவரும் இன்றைய தினத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பாராமரிப்பு பணி என கூறி எந்நாளும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திடீர் மின்தடை அமல்படுத்தப்பட்டதற்கு இன்று பகல் அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா சொற்பொழிவின் இறுதியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதிரையில் வெள்ளிகிழமை அன்று இதுபோன்ற மின்தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் TNTJ சார்பில் மக்களை திரட்டி மின்சார வாரியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.

5 comments:

  1. வரும் 30 தேதி மின்தடை செய்வதாக இருந்தது அன்று முதல் நோன்பாக இருக்கும் என்பதால் அதை 27ந் தேதி மாற்றி மின்தடை செய்யுமாறு அதிரைஎக்ஸ்பிரஸ் சார்பாக மின்வாரியத்துக்கு மனு கொடுத்து அதை ஏற்றுக்கொண்டு இன்று மின்தடை செய்து இருக்கிறார்கள் ,இந்த விபரம் அதிரைஎக்ஸ்பிரஸ் பதிந்துள்ளது.

    ReplyDelete
  2. அதிரையில் வெள்ளிகிழமை அன்று இதுபோன்ற மின்தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் TNTJ சார்பில் மக்களை திரட்டி மின்சார வாரியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.

    ReplyDelete
  3. TNTJ கண்டனமா, வெள்ளிக்கிழமை கரண்ட் இல்லையா, மாதாந்திர பராமரிப்பா, இது ஒரு பெரிய மேட்டரே கிடையாது.

    அது வந்து முப்பதாம் தேதி மாதாந்திர பராமரிப்பு இருந்தது, அன்று தலைப் பிறையோ அல்லது தலைநோன்பாக இருக்குமோ என்று நினைத்த நமதூர் சமூக மனித உரிமை ஆர்வலர் ஜமால் முஹம்மது பாய் அவர்களுடைய பல முயற்சிக்கு பின் மின் வாரியம் இந்த தேதியில் மின் பராமரிப்பை மாற்றி செய்தது, மின் வாரிய ஊழியர்களுக்கு இதெல்லாம் தெரியாது, அவ்வளவுதான்.

    இன்று ஒருநாள் மட்டும் எல்லோரும் பொறுத்து இருக்கும்போது இந்த tntjக்கு மட்டும் இருப்பு கொள்ளலையோ?

    நல்லது செய்ய நினைக்கும் tntj, அதிரையில் வட்டியை முழுமையாக ஒழிக்கலாமே, தெருவுக்கு தெரு, மூலைக்கு மூலை, வீட்டுக்கு வீடு வட்டிகள் ஆண்களுக்கு தெரியாமல் தலைவிரித்து ஆடுகிறதே.

    ஆண்துணை இல்லாமல் பெண்களை நடு ரோட்டு அழைத்து வீணடிக்கும் நீங்கள் இதுக்கும் பெண்களை நடு வீதிக்கு கொண்டு வருவீர்களோ.

    ReplyDelete
  4. போச்சுடா, ஊரிலே ஒருத்தன் நல்லது செய்திட முடியாதே, உடனே கண்டன அறிக்கை. எது எதுக்கு கண்டனம் தெரிவிக்கணும் முதலில் தெறித்து இருக்கணும். ஜமால் பாய் அவர்களார் அவரசரகால நெருக்கடியான நேரத்தில் எடுத்த முயற்சி, வெள்ளிக்கிழமை வந்து விட்டது அதுக்கு என்ன பண்ணுவது? கொஞ்சம் பொறுத்துதான் போனா என்ன? ஜமால் பாய் எடுத்த முயற்சியில் தப்பே இல்லே.

    கண்டனம் செய்யும் நீங்க என்ன செய்தீங்க, மாச கடைசி மின் வாரியத்தை அணுகி ஏதும் கேட்டீங்களா?

    ReplyDelete
  5. துபாய் இருக்கும் ரிதுவானுக்கு அதிரையில் எந்த கிழமையில் மின்தடை ஏற்பட்டால் என்ன பாதிப்பு என்று தெரியாது

    முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை பெருநாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை ADIRAI Post Man Adirai நியாபகம் காட்டுகிறேன்

    அதிகமான மின்சார தேவை நமதூரில் வெள்ளிக்கிழமைதான் தேவைப்படுகிறது என்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன்

    கண்டன் தெரிவித்து நியாயம் ADIRAI Post Man Adirai முஸ்லிமாக இருந்தால் இது தெரியும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.